சுற்று 64

110 16 3
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 6️⃣4️⃣

***************************************************

யாழினியின் மரணம்... அக்னிக்கு பேர் ஆனந்ததை அளித்தது.....
இந்த மகிழிச்சியை பகிர்ந்து கொள்ள எண்ணியவன்... வேகமாக தன் வீட்டை நோக்கி அவன் காரை விரட்ட.... அடுத்த சில நிமிடங்களில்.... அக்னி விரட்டிய கார் அவன் வீட்டின் வாசலை சென்றடைய.... வேகமாக உள்ளே ஓடியவன் கண் எதிரில் ஆதி பதற்றமாக அமர்ந்து இருந்தான்..

மச்சான்... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா..... எனக்கு இப்போ அபப்டியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு தெரியுமா..... என்ற அக்னி .. ஆதியை கட்டி அணைத்து தன் ஆனந்ததை தெரிய படுத்தினான்...

என்ன மச்சான்.... என்னாச்சுன்னு இவ்ளோ சந்தோஷமா இருக்க..... என்று ஆதி கேக்க...

யாழினி.... அந்த யாழினியை நான் என் கையால் சாகடிச்சிட்டேன் மச்சான்.... இனிமே என் தங்கையை போல எத்தனையோ பெண்கள் நிம்மதியா இருப்பாங்க மச்சான்.... அந்த மங்கை பொண்ணுல இருந்து, நம்ம அனி வரைக்கும்.. இந்த யாழினி பண்ண அட்டுழியத்துல தான் இந்த உலகத்தை விட்டே போனாங்க.... அப்படி பட்ட யாழினி இன்னைக்கு உயிரோடு இல்ல... என்று அக்னி தன் மனதார மகிழிந்து அவன் இன்பத்தை கொண்டாடினான்....

என்ன மச்சான் சொல்லுற.... உண்மையாவா... அப்போ நம்ம நினைத்தது எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுதா... என்று ஆதியும் மகிழ்ச்சியாக கேக்க...

ஆமா மச்சான்.. இன்னும் அந்த ஜான்சி ராணியின் கதையை முடிச்சிட்டா போதும்... நானே நேரா போய் போலீஸ் ஸ்டேஷன்ல surrender ஆகிடுவேன்... என்று சொன்ன அக்னியை கட்டி அணைத்து தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட ஆதியும், அக்னியும் சில நொடிகளில் ஒருவரை ஒருவர் ஆஸ்வாசப்படுத்தி கொண்டனர்....

ஏய் இரு,அனாக்கு போன் பண்ணுறேன் .... அவகிட்ட இந்த விஷயத்தை சொன்னால் அவ ரொம்ப சந்தோச படுவாள்... என்றவன்... தன் கைபேசி வாயிலாக அனகாவை அழைக்க...எதிர்முனையில் இருந்து எந்த ஒரு பதிலும் வராத காரணத்தால்....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now