🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று2️⃣2️⃣
👉எவ.... அவ....??
++++++++++++++++++++++++++++++++++++
வசீகரன் கையில் ரத்ததோடு அவன் வீட்டிற்கு சென்றவனை பார்த்த வைரத்தின் தங்கை ஏதும் புரியாமல் அவள் அறைக்குள் நுழைந்தவள் எதிரில் வைரம் அழுது கொண்டு நின்று இருக்க....
"அக்கா... என்னாச்சு... ஏன் மாமா கையில எல்லாம் ரத்தம்.... என்ன அக்கா... என்னாச்சு... அக்கா உன்னை தான் கேக்குறேன்"...
என்று தங்கம் கத்தும் சத்தம் கேட்டு... வைரத்தின் அம்மா, இவர்கள் அறைக்குள் ஓடி வர......
சத்யபாமா - "என்ன மா என்னாச்சு..ஏய் உங்ககிட்ட தான் கேக்குறேன் என்னங்கடி ஆச்சு"...
தங்கம் - "தெரியல மா..... அக்கா குளிச்சிட்டு இருந்தா...மாமா இந்த ரூமுக்குள்ள வந்தாரு... நான் வெளிய சோபாவுல இருந்தேன்....அப்புறமா மாமா கையில ரத்ததோடு வெளிய போறாரு..அக்கா அழுதுக்கிட்டு நிக்குறா"...
சத்யபாமா - "என்ன மா வைரம்..என்னாச்சு.... உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா"..
என்று தன் அம்மா கேட்டதும்... தன் அழுகையை அடக்க முடியாத வைரம்.... அவள் அம்மாவை கட்டி கொண்டவள்...
"அம்மா... வஷிக்கு என்னை பிடிக்கல மா.... அவரோட அப்பா சொன்னதால தான் என்கிட்ட அவரு பேசுறாரு... மற்றபடி எனக்கு அந்த அகில் கூட கல்யாணம் முடிந்து இருந்தா கூட அவரு சந்தோசமா தான் மா இருந்து இருப்பாரு"....
என்று வைரம் ஒ... என அழ.....வைரத்தின் அம்மா ஏதும் புரியாமல் தன் மகளை பார்த்தவள்..
சத்யபாமா - "என்னடி சொல்ற... ஏன் இப்படி உளறுற"...
தங்கம் - 'அதானே... ஏன் அக்கா இப்படி உளறுற.... மாமாவுக்கு உன்னை பிடிக்கலைனு யாரு சொன்னாங்க....நேத்து கூட நாங்க கோவிலுக்கு போயிட்டு வரும் போது... அவரு உன்னை காணாமல் எப்படி எல்லாம் தேடினாரு தெரியுமா"...
வைரம் - "பொய் எல்லாம் சொல்லாத.... நான் நம்ம குல தெய்வ கோவில்ல இருந்து அவருக்கு போன் பண்ணி, எனக்கு இங்க கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்கன்னு சொன்னேன்... அதுக்கு அவரு என்னை பற்றி எந்த கவலையும் படாம.... அந்த ஜான்சி கூட ஜாங்கிரி சாப்பிட போயிருக்காரு"...