சுற்று 21

120 17 5
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 2️⃣1️⃣

👉அவசரகாரனுக்கு புத்தி மட்டு....

**************************************

[ மதுவின் வீட்டில் இருந்து வந்த வசீகரன் & மாயன்.... தன் பழைய வீட்டிற்கு வரும் காட்சி..]

"வாடா பேராண்டி.... என்ன நீ... ஊருல தான் இருக்கியா... இல்ல வேற நாட்டுக்கு போயிட்டியா"...

என்று வசீகரனின் அப்பத்தா... வாசலில் நின்றப்படி வசீகரனை கேள்வி கேக்க...

தன் கண்ணாடியை கழட்டி சட்டை முன் பாக்கெட்டில் சொருகியப்படி வசீகரன் எதிர் வீட்டை பார்த்தவன்...

"என்ன அப்பத்தா... எதிர் வீடு ஏன் பூட்டி இருக்கு... இன்னுமா அவங்க ஊருல இருந்து வரல"....
என்று வசீகரன் கேட்டதும்..... அப்பத்தா வாயில் இருந்த வெற்றிலை உமிழை ஓரமாக துப்பியவள்....

"அதெல்லாம் எப்போவோ வந்துட்டாங்க..... அந்த சாமுண்டி சண்டாளியயையும்...அந்த எடுப்பட்ட பையன் அகிலனையும் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டு போயிருக்கு... அதனால வைரத்தோட அப்பன் ஸ்டேஷன்ல தவம் கிடக்குறான்....இந்த வைரமும் அவளோட தங்கச்சியும் இப்போ தான் அவளுங்க ஆத்தா கூட ஆட்டோல எங்கேயோ போனாளுங்க"...

என்று அப்பத்தா அவர் கண்ட காட்சியையும்..கேள்வி பட்ட செய்தியையும் வசீகரனிடம் ஒப்பீத்து கொண்டு இருக்க....

"இந்த தெருவோட GPS நீங்க தான் போல"...
என்று மாயன் அப்பத்தாவை கிண்டல் பண்ண சமயம்.... ஆட்டோவில் வந்து இறங்கிய வைரத்தின் அம்மா சத்யபாமாவும்..... தங்கை தங்கபுஷ்பமும்.. வசீகரன் அருகில் வந்தவர்கள்...

"என்ன மாம்ஸ் எப்படி இருக்கீங்க"...
என்று தங்கம் கேக்க...

வசீகரனின் கண்கள்... வைரத்தை காண ஏங்குவதை அறிந்து கொண்ட சத்யபாமா....

"தம்பி.... எங்கள கோவில்ல இருந்து ஆட்டோல போக சொல்லிட்டு... வைரம் அப்படியே வேலைக்கு போயிட்டாள் ப்பா"...

என்று வைரத்தின் அம்மா சத்யபாமா சொல்ல.... வசீகரன் முகம் வாடி போனதை பார்த்த தங்கம்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now