🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று3️⃣7️⃣
👉 என்னாச்சு ரம்முக்கு..??
***************************************************
தினேஷ் @ ஆதி வீட்டில் இருந்து அக்னி வெளியேறியதும் தன்னை யாரேனும் கவனம் கொள்கிறார்களா என்று கவனித்த தினேஷ் ..... வாசல் கதவை தாழிட்டவன்....அவனின் அலமாரியை திறந்து அதில் உள்ள புகைப்படத்தை பார்த்தவனின் கண்கள் தானாக கலங்கியது...
அவன் கண்டு கண் கலங்கும் புகைப்படத்தில்.... இரண்டு கால்களும் செயற்கை கால்கள் பொறுத்தபட்டு..Wheel chair இல் அமர்ந்து இருக்கும் அழகிய பெண் அனிச்சம் பூவின் வலது பக்கம் அக்னியும் .... இடது பக்கம் ஆதி @ தினேஷும்.... அவள் முதுகை கட்டி அணைத்து கொண்டு அனகாவும் நின்று இருக்க....
என் கைக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்ட பாவி நான்....
இனி எந்த ஜென்மத்துல உன்ன நான் பாக்க முடியும்.....
எனக்காகவே பிறந்த குட்டி தேவதை நீ... பல கசப்புகள் நிறைந்த என் வாழ்க்கையில் தேனாக வந்த என் Honey நீ.... உன்னை நான் இழந்துட்டேனே.....நான் உயிரோடு இருந்தும் உன்னை காப்பாற்ற முடியாத பாவி நான்... ஏன் Honey என்னை விட்டு போன....
உன் இழப்பை என்னால தாங்கிக்கவே முடியல Honey.....
Pls Honey..... knja நாள் வெயிட் பண்ணு... உன்னை பழி கொடுத்த பாவிகளின் கூட்டத்தை வேரோடு வெட்டி சாச்சிட்டு.. நானும் நீ போன இடத்துக்கே வந்துடுறேன்.. Pls Honey.... என்னை தப்பா நினைக்காத.... நம்ம இல்லாத உலகத்துல இவன் மட்டும் நிம்மதியா இருக்கானேன்னு என்னை நீ தப்பா மட்டும் நினைக்காத....
உன்னை கொடூரமாக சாகடித்த பாவிகளை பழி தீர்க்க தான் நான் என் உசுரை கையில பிடித்து வச்சி இருக்கேன்...
கண்டிப்பா கூடிய சீக்கிரமே... நானும் உன் கூட வந்துடுவேன் Honey.... நீ இல்லாம என்னால வாழ முடியல டி....என்று...... புகைப்படத்தை பார்த்து கண்கள் கலங்கி அழுது புலம்பும் ஆதி @ தினேஷின் தோளில் கைவைத்த ஒருவரின் முகத்தை பார்த்து தினேஷ் பேய் அரைந்தது போல நின்றவன்....
"ஏய்... யாரு நீங்க...!?"
என்று தினேஷ் கேக்க....பூட்டிய வீட்டில்... இவனை காண வந்தது யார்...???
என்று வரும் பகுதியில் வாசிப்போம்....