🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 1️⃣7️⃣
👉விளையாட்டு வினையாகும்..
**************************************************
தாராவின் தோழிகளில் இருவரான யாமினி மற்றும் யாழினியை பார்ப்பதற்காக மாயனும் வசீகரனும் விமானம் மூலம் கொச்சின் செல்ல....
பிரயாண நேரத்தில்.... தாராவின் கொலை வழக்கை பற்றி மட்டுமே வசீகரன் யோசித்து கொண்டு வர....
மாயானோ.... மதுவின் பெயரை மாதவி என்று அவள் அக்கா அழைக்க காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் முழுகி இருக்க.....
மறுநாள் காலை நேரம் இவர்கள் இருவரும் கொச்சினை சென்றடைந்தவர்கள்... ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு....குளித்து முடித்த பின்பு யாமினி யாழினி முகவரியை தாராவின் Face Book மூலமாக அறிந்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள்...
அந்த வீடு பார்க்க அவர்களின் முறை படி கட்டிய விசலாமான பங்களாவை போல காட்சி தந்தது........
வாசலுக்கு வெளியே வாட்ச் Man இவர்களை பார்த்ததும்... யாரு என்ன என்று அவரின் மொழியில் விசாரிக்க....
தன் பாக்கெட்டில் இருந்த சிபிஐ கார்டய் எடுத்து வசீகரன் watch man இடம் காட்டியதும்... Watch man யாருக்கோ அலைபேசி மூலம் தகவல் சொல்ல....
" நிங்களுக்கு வீட்டில் போகாம் " என்று அவர் மொழியில் சொல்ல....
வசீகரனும் மாயனும் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்களை பார்த்த ஒருவன்..."நீங்கள் எந்தினானு எவிடெ வன்னாது?? " என்று அவர் மொழியில் கேட்டதும்...
"நாங்க யாமினி and யாழினியை பார்க்க சென்னையில இருந்து வந்து இருக்கோம்"...
என்று மாயன் சொல்ல...."ரண்டு பேரும் எவிடெயில்லா நீங்களுக்கு போக்கம் " என்று அந்த ஒருவன் கோவமாக சொல்ல...
"மச்சி நான் மலையாள படம் பார்த்து இருக்கேன்... அதுல No டயலாக்.... ஒன்லி ஹாட் சீன் தான்.... ஆனா இந்த ஆளு பேசுற மலையாளம் எனக்கு புரியலயே "
என்று மாயன் தன் மண்டையை சொரிய..