🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 1️⃣0️⃣
👿இது ஆரம்பம் தான் 👿
-----------------------------------------------------------------------
இடம் AN ART & GALLERY
" Listen ஸ்டுபிட்.... மார்னிங் ஷார்ப்பா 6am kku பார்சல் டெலிவரி ஆகணும்... அப்படி ஆகல உன் கண்ணு ரெண்டும் உன் முகத்துல இருக்காது "என்று அந்த பெண் யாரிடமோ போனில் காட்டமாக பேசியவள்... தன் செல் போனை அமர்த்தி... சுழல் நாற்காலி மூலம் சுத்தி வந்து தன் போனை டேபிள் மேல் வீசியவளின் கண்களுக்கு முன் மாயனும் வசீகரனும் நின்று இருக்க....
" ஏய் சிலுக்கு.... நீ என்ன பண்ற இங்க...!!?? " என்று மாயன் கேக்க.... வசீகரன் தன் புருவத்தை உயர்த்தி தன் எதிரில் உள்ள நாற்காலியில் திமிராக அமர்ந்து இருக்கும் அந்த பெண்ணை பார்த்தவன்...
" நீ எப்படி இங்க " என்று ஏதும் புரியாதனாக கேள்வி கேக்க...
DR. அனகா - என்னோட கேள்வியும் அதான்.... நீங்க என்ன பண்றீங்க இங்க.... என்ன உங்க சிஸ்டர் Mrge. kku gift வாங்க வந்திங்களா...
மாயன் - இல்ல.... உன்னை சந்தேகத்தின் பேரில் அர்ரெஸ்ட் பண்ண வந்தோம்..
அனகா தன் இருக்கையில் இருந்து எழுந்தவள்.... மாயனின் அருகில் வர.... அவளின் perfume வாசனையில் மாயன் மதி மயங்கியவனின் மார்பில் கை வைத்து அவனை தள்ளியதும்... மாயன் ஒரு அடி பின் தங்கியவனை பிடித்த வசீகரன்....
"ஏய் listen " என்று குரலை உசத்த....
"First of all you listen mr." என்று அனகா கண்களில் கோவம் கொழுந்து விட்டு எரியும் தருணம்....
" என்ன.... என்ன இங்க சத்தம் " என்று கேட்டுக்கொண்டே.... தானே இயங்கும் கண்ணாடி கதவின் பின் இருந்து வந்த Dr. டெல்லி கணேசன்...
"என்ன.... என்ன ப்ரோப்லேம் இங்க.... Mr. கரன்... நீங்க என்ன பண்றிங்க இங்க .... அதான் நான் நேத்தே சொல்லிட்டேனே... உங்க தங்கச்சி இப்போ எங்க இருக்கான்னு எங்களுக்கு தெரியாது.... ஏன் சும்மா சும்மா வந்து எங்களை இம்சை பண்ணுறீங்க " என்று டெல்லி கணேஷன் கண்களை உருட்டி கோவமாக கேக்க.....