சிற்று 8

148 20 6
                                    

🐏ஆடு புலி 🐅

👉சுற்று 8️⃣

📎மர்ம தேசம் 📎

-----------------------------------------------------------------------

மமூட்டியின் வீட்டுக்கு வந்த பார்சலில் தாராவின் ரத்த கரை படிந்த ஆடையை பார்த்த மமூட்டி மயங்கி கீழே விழ.....

வசீகரன் - மாயா... உள்ள போய் தண்ணி கொண்டு வா..... அப்பா... அப்பா இங்க பாருங்க...

வசீகரன் மமூட்டியை தன் மடியில் தாங்கியவன்... அவர் நிலையை கண்டு பதற....

வைரம் - வஷி அவருக்கு முதல்ல குடிக்க தண்ணி குடுங்க....

மாயன் அவருக்கு அருந்த தண்ணீர் தர.....

"ஐயோ தாரா.... என் மக தாராவுக்கு
என்னாச்சு "
என்று கதறும் மமூட்டியை சமாதானம் பண்ணும் விதமாக...

"அப்பா.... தாராவுக்கு ஏதும் ஆகி இருக்காது... இது Just before mrge.
அவங்க friends எல்லாம் சேர்ந்து அவளை prank பன்றாங்க போல... So pls நீங்க panic ஆகாதீங்க... முதல்ல எழுந்து உள்ள வாங்க "
என்று சொன்ன வசீகரன்.... மமூட்டியை வீட்டுக்குள் அழைத்து சென்றவன்.... தன் கண்களால் மாயனிடம் ஏதோ சொன்னதும்.... மாயன் கீழே கிடந்த வைரத்தின் போனை அவளிடமே எடுத்து தந்தவன்..பார்சலையும் எடுத்து கொண்டு வீட்டுக்குள் சென்றவனை வைரமும் பின் தொடர....

"மாயா... Watchmanai கூப்பிடு "
என்று வசீகரன் சொன்ன அடுத்த நொடி வாட்ச் man முருகன் வீட்டுக்குள் வர...

வசீகரன் - "யாரு உங்ககிட்ட இந்த பார்சலை தந்தது "

வாட்ச் man - "ஹெல்மெட் போட்டுக்கிட்டு ஒரு ஆளு நான் gate கிட்ட நிக்கும் போது... என் மேல அந்த டப்பாவை தூக்கி போட்டுட்டு போயிட்டாங்க"...
என்று குரலில் நடுகத்துடன் வாட்ச் man சொன்னதும்....
வசீகரன் மீண்டும் மாயணை பார்த்து கண் ஜாடை காட்ட...

"வண்டி நம்பர் பாத்திங்களா "
என்று மாயன் கேட்டதும்...

"இல்லிங்க... அதெல்லாம் நான் பாக்கல... டப்பா மேல ரத்தத்தில் என்னமோ எழுதி இருந்ததை பார்த்ததும் எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்துக்கூச்சீங்க "
என்று வாட்ச் man பதற்றதுடன் சொன்னதும்.... மமூட்டி கண்களில் கண்ணீருடன் வசீகரனின் கரங்களை பிடித்தவர்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now