சுற்று 40

124 18 17
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4️⃣0️⃣

👉 திருமதி வசீகரனின் வைரம்....

***************************************************

"என்ன அம்மா சொல்றிங்க... வெற்றி மாமாவை கொலை பண்ணது நம்ம அப்பாவா"...என்று அதிர்ச்சியாக கேட்டாள் வைரம்....

"ம்... ஆமாடி... உன் அப்பனே தான்"... என்று கண்களில் கண்ணீருடன் சொன்னார் வைரத்தின் அம்மா சத்யா....

"என்ன ம்மா சொல்ற... அப்பா ஏன் மாமாவை கொலை பண்ணனும்"... என்ற கேள்வியை அனைவரின் சார்பில் வைரத்தின் தங்கை தங்கம் கேட்க...

"அத்த.... நீங்க முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க.... ரம்மு... நீ இவங்கள உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ.... அப்பத்தா நீங்களும் கிளம்புங்க... மாயா... இவங்கள எல்லாம் நம்ம ஜீப்ல அழைச்சிட்டு போய் இவங்க வீட்டுல விட்டுட்டு வா".... என்றான் வசீகரன்....

"வஷி..... அம்மா என்ன சொல்லுறாங்க.... உங்க அப்பாவை... என் வெற்றி மாமாவை கொலை பண்ணது என் அப்பாவா".... என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள் வைரம்...

மாதவி - 🤨

"இல்ல டி... அப்படி எல்லாம் இல்ல... நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு... அத்த இவங்கள அழைச்சிட்டு போங்க"... என்று வசீகரன் சொன்னவன்... மாடி படிக்கடில் கால் பதிக்க...

"நில்லு பா..... போதும்.... இத்தனை வருஷம் நீ இந்த ஊர் முன்னாடி கொலை காரனா வளம் வந்தது போதும்....குறைந்த பட்சம் உன் குடும்பத்தின் முன்னாடியாவது நீ கொலை காரன் இல்லை... உன் அப்பாவால் தான் உனக்கு இந்த நிலைமை என்ற உண்மையை சொல்லிடு பா".... என்று கெஞ்சும் குரலில் பேசினார் சத்யா...

"இனிமே சொல்லி மட்டும் என்ன ஆகபோகுது அத்த.... வேணா... யாருக்கும் நான் நல்லவன்னு புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.... இப்போ என்ன...என் ரம்மு என்னை நம்புறாளே.. எனக்கு அதுவே போதும்... நீங்க கிளம்புங்க"..
என்றவன் மீண்டும் மாடி படியில் கால் பதித்தான்..

மாதவி - 😡

"நில்லுங்க வஷி".... என்று வைரம் கோவமாக அழைக்க... அதே இடத்தில் நின்றான் வசீகரன்..
அவனை நெருங்கிய வைரம்... சட்டென்று அவன் கரங்களை பிடித்து தன் தலைக்கு மேல் வைத்தவள்.. கண்களில் கண்ணீருடன்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now