🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 4️⃣5️⃣
💜காரணமின்றி காரியம் இல்லை....
***************************************************
யாமினியின் கதையை முடித்தது தினேஷ் @ ஆதி தான் என்ற செய்தியை கைபேசி வாயிலாக கேட்ட வசீகரனின் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியை கண்டு மாயனும் மாதவியும் குழம்பிய வண்ணம் நின்று இருக்க...
"என்ன வஷி... என்னாச்சு... எதாவது பிரச்சனையா".... என்று வைரம்.... வசீகரனின் தோளில் கை வைத்து உளுக்கியதும்....
"ஹாங்... அது... அது வந்து... தினேஷ்"... என்று வசீகரன் செய்தியை சொல்லும் முன்பு.... மாதவியின் கைபேசி அலற...
"ஹலோ...
What....??
எப்போ...??
எங்க...??
Oho ஷிட்"....என்றவள்..."ஜான் இறந்துட்டான்னாம்".....
என்று சொன்ன மாதவியை பார்த்த வசீகரன்...
"யாமினியை... தினேஷ் கொன்னுட்டானாம்"... என்று சொல்ல...
"என்னடா சொல்ற... ஐயோ"... என்று மாயன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்த தருணம்..
"மாயா வண்டியை எடு.....ரம்மு... நீ door லாக் பண்ணிக்கோ...ஸ்ரீ...ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க...
மாயா... come on"...
என்று அவசரமடைந்தவனை... மாதவியும் மாயனும் பின் தொடர....***************************************************
அடுத்த சில நிமிடங்களில் வசீகரன் விரட்டிய ஜீப்.... சைத்ராவின் வீட்டு வாசலை சென்றடைந்தது....
மூவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல... அங்கே கண்கள் இரண்டும் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் யாமினியின் கை நரம்பு வெட்டபட்டு... உயிரற்ற பிணமாக இருக்கையில் கிழிந்த துணியை போல இறந்து கிடந்த யாமினியின் சடலத்தை கண்டு முதலில் ஏளனமாக சிரித்த வசீகரன்.... சட்டென்று யாரும் பார்க்கா வண்ணம் பொய்யான கோபத்தில் கண்கள் சிவந்தான்.....
சைத்ரா - Sorry மச்சி... நான் எவ்வளவோ carefullaa தான் வாட்ச் பண்ணேன்.. பட்...
என்றவளும் யாரும் பார்க்காத நிலையில்....வசீகரனை பார்த்து ஒரு கண்ணை😉அடிக்க....இந்த காட்சியினை காணாத மாதவியும் மாயனும் செய்வதரியாமல் கோவத்தில் இருந்தார்கள்...