சுற்று 58

106 18 5
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 5️⃣8️⃣

அனிச்சம் பூ...

***************************************************

👉( Flash Back )

போலீஸ் ஸ்டேஷன் வாசலின் ஓரமாக காரில் காத்து இருந்த அனகாவிற்கு... ஸ்டேஷன்க்குள் என்ன நடக்கிறது என்ற கேள்வி ஒரு புறம் தோன்ற.... அனிச்சம் பூ எங்கே என்ற கேள்வியும் எழும்பியது....

பொறுத்து இருந்தால் இனி காரியம் கெட்டு போகும் என்று எண்ணிய அனகா... தன் கைபேசி வாயிலாக ஆதியை அழைத்து விவரத்தை தெரிய படுத்தியதும்....

ஆதி... தலை கால் அறியாதவனாக ஸ்டேஷன்க்கு ஓடி வரும் வழியில்....எதிர் பாராத வண்ணமாக காரில் அடிபட்டு விபத்துக்கு ஆளாகியவனை அக்கம் பாக்கத்தில் இருந்தோர் மருத்துவ மனையில் அனுமதித்து இருந்தார்கள்...

அனகா சொன்ன தகவலை கேட்டு ஆதியும் வரவில்லை.... ஸ்டேஷன்க்குள் சென்ற அக்னிக்கும் அவனின் அப்பா விஜய குமாருக்கும் என்ன நேர்ந்ததோ என்ற கவலை அனகா மனதில் எழ ஆரம்பிக்க...

ஸ்டேஷன்க்குள் இருந்து வெளியே வரும் ஒரு காவலரை பின் தொடர்ந்து சென்ற அனகா...... அவர் முன் பவ்யாமாக நின்றவள்...

"சார் Pls சார்.... என் friend அக்னி and அவன் அப்பா ரெண்டு பேரும் உங்க ஸ்டேஷன்க்கு வந்தவுங்க..... கிட்டதட்ட 3hrs ஆகியும் இன்னும் வெளிய வரல.... Pls சார்... சொல்லுங்க... அவங்க இப்போ எங்க இருக்காங்க".... என்று அனகா கெஞ்சும் குரலில் கேட்டவள்... தன் கழுத்தில் இருந்த வைர டாலர் தொங்கி கொண்டு இருந்த செயிண்ணை கழட்டி அந்த நபரிடம் தந்தாள்...

"இந்தா மா... உன்ன பார்க்க படிச்ச பொண்ணு மாதிரி இருக்க... என்ன.... என்கிட்டயே லஞ்சம் தர பாக்குறியா.... எல்லா போலீஸ் காரங்களையும் ஒரே மாதிரி நினைக்காத மா.... நான் இது நாள் வர ஒரு ருபாய் கூட அடுத்தவன் பணத்தை தொட்டது இல்ல... " என்று அந்த காவலர் சொல்லும் போதே... அவர் கண்ணில் ஒரு நேர்மை தெரிந்தது....

" Sry சார்... எல்லோரையும் ஒரே மாதிரி நினைச்சது என் தப்பு தான்... பட் pls சொல்லுங்களேன்.... என் நண்பன் அக்னியும் அவன் அப்பாவும் எங்க... அவங்க ரெண்டு பேரும் ஸ்டேஷன்க்குள்ள போனதை நான் பார்த்தேன்... ஆனா நான் உள்ள போய் அவங்க எங்கன்னு கேட்டா யாருமே எந்த பதிலும் சொல்ல மாட்டுறாங்க... " என்று அனகா தன் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு அந்த காவலரிடம் கெஞ்சலாக கேக்க...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now