🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 4️⃣7️⃣
💜உண்மை ஒரு நாள் உருவம் பெரும்..
***************************************************
வைரத்தை சீண்டி பார்க்க நினைத்த வசீகரனின் விளையாட்டு வினையாக முடிந்ததை அறியாத வசீகரன்... தன் அறையில் தன்னவளின் வருகைக்காக காத்து இருந்தவன்.... நீண்ட நேரம் கடந்தும்.... வைரத்தின் தரிசனம் கிட்டமால்.... அவனே தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தவனின் கண்கள்... தன் மனைவி எங்கே என்று தேட...
அதே சமயம்.... கையில் தண்ணீர் பாட்டிலுடன் அவள் அறையில் இருந்து வெளியே வந்த மாதவி.... வசீகரனை கண்டும் காணாமலும் சமையல் அறைக்குள் சென்றவள்... மீண்டும் தண்ணீர் பாட்டிலுடம் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்....
வசீகரனோ... வைரத்தை காணாமல்.... சமையல் அறைக்கு சென்றவன்...
வஷி - எங்க போனா இவ.... நான் உண்மையா கோவப்பட்டேன்னு நினைச்சுகிட்டு கார்டன்ல போய் அழுதுகிட்டு இருக்காளா...
என்று தனக்குள் எண்ணியவன்... வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல.... அங்கே மாயன் கையில் சிகிரெட்டுடன் நின்று இருந்தவன்...
என்ன மச்சி... சாப்பிட்டியா.... என்று கேக்க...
டேய்... ரம்மு எங்க டா... வீட்டுக்குள்ள அவள காணோம்... என்று வசீகரன் பதற்றதுடன் சொன்னதும்...
என்ன உன் பொண்டாட்டியை காணோமே... டேய்.... என்ன விளையாடுறியா...என்று கேட்ட மாயன்... தம்மை கீழே போட்டவன்...பதற்றத்தில் இருந்த வசீகரனை கண்டு...
என்னடா உண்மையாவே பாப்பாவை காணோமா.. ஏன் மச்சி... உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா.... என்று மாயன் கேக்க....தன் தலையை அழுத்தமாக கோதிகொண்டவன்...நேராக சென்று மாதவி அறை கதவை தட்ட...
என்னடா... ஏன் இப்போ இவ்ளோ வேகமா கதவ தட்டுற... அறிவில்ல உனக்கு... உள்ள என் அக்கா தூங்கிகிட்டு இருக்காங்க.. ஏன் இப்போ கதவை தட்டின..
என்று மாதவி மூச்சு விடாமல் பேசி கொண்டு இருந்தவளை ஒரு பொருட்டாக மதிக்காத வசீகரனின் பார்வை.... வைரத்தை தேடி கொண்டு இருக்க..