சுற்று 24

122 20 5
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று2️⃣4️⃣

👉யார் அழைப்பது ....??

++++++++++++++++++++++++++++++++++++

"என்ன சொல்றிங்க வஷி.... child abuse னா....எனக்கு புரியல"......
என்று வைரம் குழம்பிய வண்ணம் அவனை கேள்வி கேக்க......

"என் கூட சக கைதியாக இருந்த சிலர்.....ஜெயில்ல ஓர் இன சேர்க்கைக்கு என்னை கம்பெல் பண்ணதால... நான் அவனுங்கள அடிச்சுட்டேன்...அவனுங்க அத மனசுல வச்சிக்கிட்டு ஒரு முறை என்னையும்... எனக்கு எல்லாமுமா இருந்த மாயனையும் கட்டம் கட்டி ஒரு இடத்துல லாக் பண்ணிட்டாங்க....

எங்க ரெண்டு பேரையும் அவங்க கூட ஒண்ணா இருக்க சொல்லி ரொம்பவே கொடுமை பண்ணுவானுங்க... அப்போ எல்லாம் கையில என்ன கிடைக்கிதோ அதால அவனுங்களை கண்டம் துண்டமா வெட்டணும்ன்னு தோணும்.... ஆனா நாங்க அங்க கோவப்பட்டு என்ன பண்ணாலும்... அது எங்க தண்டனை காலத்தை தான் நீட்டிக்கும் என்ற காரணத்தால் ஒரு ஒரு நாள் இரவும் தூங்காம நானும் மாயனும் விழிச்சிகிட்டே இருப்போம்.....
ஜெயில் வாழ்கை ரொம்ப கொடுமையானது..... அதுவும் எந்த ஒரு தவறும் தப்பும் செய்யாமல் போற என்னை போல ஆளுங்களுக்கு நரகத்தை கண் முன்னாடி காட்டிய இடம் தான் சிறை சாலை....

சின்ன பசங்கன்னு கூட பாக்காம சிலர் அவங்கள வன்கொடுமை பண்ணுவாங்க....
இதுல மனதளவில் நிறைய பிள்ளைங்க பாதிக்கப்பட்டு... வருங்காலத்துல அவங்க எல்லாம் ரொம்ப கொடூரமான ஆளுங்களா கூட மாற வாய்ப்பு இருக்கு....

ஆனா நானும் மாயனும்.... எங்கனால முடிந்த வரை அங்க எங்களையும் சேர்த்து, எங்களை சார்ந்த நிறைய பசங்களை எல்லாம் காப்பாத்தினோம்....

அப்போ தான் மமூட்டி அப்பா போல சில நல்ல அதிகாரிங்க.... எங்களை அந்த மாதிரி கேவலமான எண்ணமுடைய ஜென்மங்களிடம் இருந்து காப்பாற்றி... எங்களுக்கும் என்றுமே அழியாத செல்வமான கல்வியை தந்தாங்க....

நீ பாக்குறியே மாயன்... அவன் நான் கை நீட்டுற வேலை எல்லாம் பண்ற அடிமை இல்லை எனக்கு.... அவன் ஒரு லாயர்...
ஏன்... எங்கூட சிறையில இருந்த நிறைய பசங்க... இப்போ மருத்துவரா, வாத்தியாரா, வக்கீலா.... பல துறையில சாத்திக்கிறாங்க... ஆனா சில பேர்... இந்த மாதிரி சின்னதுல பல கொடுமையை அனுபவிச்சு... கால போக்குல... சிறையில் இருந்து வந்ததுமே... கட்டபஞ்சாயத்து... அடித்தடின்னு இறங்கி... அவங்க வாழ்க்கையை இன்னும் அசிங்கப்படுத்திக்கிறாங்க.... ஹ்ம்.. என்ன பண்ண சொல்ற.... எதுவுமே நமக்கு நடக்காத வரை அது நமக்கு ஒரு செய்தி தான்.... ஆனா வலியும் வேதனையும் அவங்கவங்க அனுபவிக்கும் போது தான் அந்த கொடுமை நமக்கு புரியும்.....

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now