7 அர்ஜுனின் வீட்டில் இந்து

1.8K 89 8
                                    

7 அர்ஜுனின் வீட்டில் இந்து

இந்துவை தன் கையில் ஏந்திகொண்டு அனாயாசமாக நடந்து சென்றான் அர்ஜுன். கண் இமைக்காமல், செய்வதறியாமல், அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.

வித்யா தொண்டை கிழிய கத்தத் துவங்கினாள்.

"அவன் என் பொண்ணை தூக்கிகிட்டு போறான்... என்கிட்ட இருந்து  எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போறான்... யாராவது அவனை தடுத்து நிறுத்துங்க... என் பொண்ணை காப்பாத்துங்க..."

"அம்மாமாமா... " என்று அழுதாள் இந்து.

கிரியை ஒரு பார்வை பார்த்தான் அர்ஜுன். ஐநூறு  ரூபாய் நோட்டு கட்டுகள் நான்கை எடுத்து, வித்யாவை நோக்கி நீட்டினான் கிரி. அதை பார்த்தவுடன் பேச்சிழந்து நின்றாள் வித்யா. அவள் கையில் அந்த ரூபாய் கட்டுகளை திணித்துவிட்டு, அர்ஜுனை பின்தொடர்ந்தான் கிரி. வித்யா அமைதியாகிவிட்டதை பார்த்து, கிட்டத்தட்ட மயக்கம் அடையும் நிலையில் இருந்த இந்துவை பார்த்து, புன்னகை பூத்தான் அர்ஜுன்.

இந்துவினுடைய பையை, ஒரு பாதுகாவலனிடம் கொடுத்தாள் விமலா. அதை அவன், அர்ஜுனின் காரில் வைத்தான். கோவிந்தன், அர்ஜுனுக்கு காரின் கதவை திறந்துவிட்டான். இந்துவை அமர வைத்து, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பின், காரை ஸ்டார்ட் செய்ய கிரிக்கு உத்தரவிட்டான் அர்ஜுன்.

காரின் கண்ணாடி ஜன்னலின் வழியாக வித்யாவை நோக்கினாள் இந்து. அவளோ, கிரி கொடுத்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை விழி விரிய பார்த்துக் கொண்டு நின்றாள். தன் கைகளால் தன் முகத்தை மூடிகொண்டு அழுதாள் இந்து. கார் அங்கிருந்து நகர்ந்தது.

வித்யாவின் தோளை பிடித்து உலுக்கினாள் வீணா.

"என்ன செஞ்சுகிட்டு இருக்க நீ? என்ன நடக்குது இங்க?  இந்துவை வேற எவனோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டான். அவளை அவன் எங்கேயோ கூட்டிட்டு போறான். யார் அவன்? இதுக்கப்புறம் எப்படி வீட்டை விக்க போற? நமக்கு அவனுடைய கையெழுத்து வேணும். இப்போ, அவன் தான் இந்துவுடைய புருஷன்" என்று எரிந்து விழுந்தாள் வீணா.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now