Part 31

1.5K 88 5
                                    

பாகம் 31

அர்ஜுனுடைய ஊடுருவும் பார்வை, அந்த மூன்று பெண்களின் வயிற்றை  மத்தால் கடைந்து. தன் கைகளின் நடுக்கத்தை மறைக்க அவற்றை ஒன்றுடன் ஒன்றாய் பிணைத்துக் கொண்டாள் ஹீனா. இந்துவுக்கோ, அவள் தொண்டை வற்றி போனது போல் தோன்றியது. ஆனால் ரம்யாவிற்கு, அர்ஜுன் மேல்  சிறிது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், விஷம் கலந்த உணவை பற்றி, இந்துவிற்கு கூறியது ஹீனா தான் என்று அவள் தானே அவனிடம் கூறியது... இருந்தபோதிலும் அவள் தலை குனிந்து நின்றாள்.

மெல்ல மெல்ல, அர்ஜுனை நோக்கி அடி எடுத்து வைக்க துவங்கினாள் இந்து. அர்ஜுனும் அவள் கண்களிலிருந்து தன் கண்களை அகற்றாமல், அவளை நோக்கி முன்னேறினான். அவன் கையை மென்மையாய் பற்றிக்கொண்டாள் இந்து.

"என்னங்க..."

அவளுடைய சில்லிட்டுப் போன உள்ளங்கையும், நடுக்கமான குரலும், அவளுடைய நிலையை கூறியது. அவளுடைய மென்மையான கரங்களுக்கு, அர்ஜுனை வேரோடு சாய்க்கும் சக்தி இருந்தது... அதை அர்ஜுன் உணர்ந்தான்.

"எனக்கு ஹீனா தான், சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிற விஷயத்தை போன் பண்ணி சொன்னா. அவ நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. அவங்க அம்மா செஞ்ச தப்புக்காக, அவ உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படுறா. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க தான் அவ இங்க வந்திருக்கா. நானும் கூட, உங்களை காப்பாத்துறதுக்காக, சரியான நேரத்துல அவ செஞ்ச உதவிக்காக  அவளுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன்ங்க..." தட்டுத்தடுமாறி அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள் இந்து, நடுங்கும் குரலில்.

தன் கையை பற்றியிருந்த அவள் கையை மெல்ல விடுவித்து, அவளுக்கு மேலும் பதற்றத்தை கூட்டினான் அர்ஜுன். ஒன்றும் சொல்லாமல் நடந்தான், ஹீனாவிடம் வந்த பொழுது, நின்று அவளை பார்த்தான். ஹீனா தன் துப்பட்டாவை, பயத்துடன்  இருக்கமாய் பற்றிக்கொண்டாள்.

ஆனால் யாரும் எதிர் பார்க்காத வண்ணம், ஹீனாவை பார்த்து,

"தேங்க்ஸ்..." என்று கூறிவிட்டு, தன் அறையை நோக்கி சென்றான் எந்தவித குழப்பமும் இல்லாத முகத்துடன்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now