Part 44

1.4K 86 10
                                    

பாகம் 44

தன் முன்னால் சங்கர் வந்து நின்றவுடன், சட்டென்று எழுந்து நின்றான் கிரி. தான் காவல் நிலையத்தில் பதிந்த வழக்குக்கான எஃப் ஐ ஆர் நகலையும், மாஷாவின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் நகலையும் கிரியிடம் வழங்கினார் சங்கர்.

"மாஷா எடுத்துகிட்டு போன நகைகளுடைய போட்டோஸ் எல்லாத்தையும் நாங்க போலீஸ்ல கொடுத்திருக்கோம். இது தான், அந்த போட்டோசோட காப்பி. நீங்களும் இதை பான் புரோக்கர்சுக்கு அனுப்புங்க"

"தேங்க்யூ"

"பான் புரோக்கர் நிறைய பேர் இருக்காங்களே, எல்லாருக்கும் இதை அனுப்பிட முடியுமா? "

"தேவையில்ல... அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு. அந்த சங்க தலைவருக்கு அனுப்பி வச்சுட்டா போதும். மீதியை அவங்க பாத்துக்குவாங்க"

" நல்ல ஐடியா "

"மாஷா எங்க இருப்பாங்கன்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"

"அவளுடைய பாஸ்போர்ட்டையும், ஆதார் கார்டையும் எடுத்துக்கிட்டு போயிட்டா. அவ ஏதோ ஒரு நாட்டுக்கு போக ப்ளான் பண்றான்னு நினைக்கிறேன்"

 தீவிரமாய் யோசித்தான் கிரி.

"தயவுசெய்து அர்ஜுனனையும் இந்துவையும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு... அவங்களை சேவ் பண்ணு" என்று அவர் கூறிய போது, அவர் குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

சரி என்று தலை அசைத்தான் கிரி. அங்கிருந்து கிளம்பிச் சென்றார் சங்கர்.

"அந்த பொம்பளைகிட்ட, இவர் அப்படி என்ன தான் பாத்தாரோ தெரியல... சீதாம்மா மாதிரி அவங்க அழகும் இல்ல... நல்ல மனசும் இல்ல... ஏன் தான் ஆம்பளைங்க தங்களுடைய நல்ல வாழ்க்கையை இபடியெல்லாம் வீணாக்குறாங்களோ தெரியல..." என்று மனதில் நினைத்தான் கிரி.

அடுத்து செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கினான் கிரி. அடகு கடை முதலாளிகள் சங்க தலைவருக்கு போன் செய்தான்.

"யார் பேசுறீங்க?" என்றார் தலைவர்

"நான் எஸ் ஆர் கம்பெனி மேனேஜர் கிரி பேசுறேன்..."

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now