Part 37

1.5K 90 6
                                    

பாகம் 37

மாஷா, சங்கர் இல்லத்தில் தான் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, கோபத்தில் கொந்தளித்தான் கிரி. அவர் சிறையிலிருந்து தப்பிய நாள் முதற்கொண்டே, அவர் அங்கு தான் இருக்க வேண்டும் என்று சந்தேகித்தான் கிரி. அதனால், சங்கர், ஹீனா மற்றும் சங்கர் இல்லத்தின் லேன்ட்லைன் போன்களை ட்ராக் செய்வது என்று தீர்மானித்தான். அவன் எதிர்பார்த்தது போலவே, லேண்ட்லைன் போனிலிருந்து பேசினார் மாஷா. அவனுக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், அவர் அங்கு இருப்பது சங்கருக்கும் ஹீனாவுக்கும் தெரியுமா என்பது தான். ஒரு வேளை,  அவனுடைய கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி விட்டு, ஹீனா தன்னை நல்ல பெண்ணாக காட்டிக் கொண்டு அவளுடைய அம்மாவிற்கு உதவுகிறாளோ? இது பற்றி அர்ஜுனுடன் பேச வேண்டும்.

ஆனால், அன்று அலுவலகத்திற்கு வர மாட்டேன் என்று கூறி இருந்தான் அர்ஜுன். திடீரென்று அவன் போன் செய்து,  ஒரு சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும் என்று கூறினான். எதற்காக என்று அவன் கூறவில்லை. ஒருவேளை இந்துவிற்கு உடல்நிலை சரியில்லையா? இப்போது அவனைத் தொல்லை படுத்தத் தான் வேண்டுமா? ஆனால், மாஷாவை பற்றி அவனிடம் கூறவில்லை என்றாலும் அவன் கோபப்படுவான். இப்போது என்ன செய்வது? இந்த நேரம், அவன், இதய சிகிச்சை நிபுணரை சந்தித்துவிட்டிருக்க வேண்டும். அவன் வீட்டிற்கு செல்லட்டும். ஒருவேளை அர்ஜுனே கூட அவனை அழைக்கலாம். அப்படி அர்ஜுன் அழைத்தால், அனைத்தையும் சொல்லி விடுவது என்று முடிவு செய்தான் கிரி.

ஆனால், அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை, இப்பொழுது எதைப் பற்றியும் சிந்திக்கும் நிலையில் அர்ஜுன் இல்லை என்பது. தான் செய்யவேண்டிய முக்கியமான விஷயத்தை நினைத்துக் கொண்டு, வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
 
சீதா ராணி இல்லம்

போனில் அர்ஜுன் கூறியதைக் கேட்டு, ஒன்றும் புரியாமல் முகம் சுளித்தார் வேலன். அதே முகபாவத்துடன் தன் கையில் இருந்த போனை உற்றுப் பார்த்தார் அவர்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now