Part 47

1.4K 86 9
                                    

பாகம் 47

மறுநாள்

தனது வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ரம்யா. சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கிரிக்கு போன் செய்தாள்.

"சொல்லு ரம்யா"

"என்னோட அக்கவுண்டுக்கு ஒரு கோடி ரூபா வந்திருக்கு"

"வந்துடுச்சா? ஓகே..."

"ஒரு கோடி ரூபா பா..."

"ஆமாம், அர்ஜுன் தான் போட சொன்னான்"

"இது ரொம்ப அதிகம் கிரி"

"நீ எங்களுக்காக செஞ்ச உதவிக்கு இது ரொம்ப கம்மி" என்ற அர்ஜுனின் குரல் கேட்டு பின்னால் திரும்பினாள் ரம்யா.

இந்துவுடன் நின்றிருந்தான் அர்ஜுன்.

"என்னுடைய டியுட்டியை தானே நான் செஞ்சேன்..."

"நீ செஞ்சது வெறும் டியூட்டி மட்டும் இல்ல... அதுக்கும் மேல நிறைய செஞ்சிருக்க"

"என்னுடைய ஃபிரண்ட்ஸ்க்கு நான் செய்வேன் தானே...?"

"என்னுடைய ஃபிரெண்டுடைய லைஃப் நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைப்பேன்" என்றான் அர்ஜுன்.

"ரம்யா, உன்னால இவர்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. அதனால வாங்கிக்கோ"

"இல்ல இந்து..."

"நீ மட்டும் சரியான நேரத்துல எங்களுக்கு ஹெல்ப் பண்ணலைன்னா, இந்த நேரம் நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கு தெரியல. எங்களுடைய திருப்திக்காக இதை ஏத்துக்கோ" என்றாள் இந்து.

சரி என்று தலையசைத்தாள் ரம்யா.

"இது மட்டும் இல்ல. நீ எது வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்னை கேட்கலாம்" என்றான் அர்ஜுன் ஸ்னேகத்துடன்

"ரொம்ப தேங்க்ஸ். நான் பாண்டிச்சேரி போய் ரேவதியை விட்டுட்டு வரேன்"

"சரி "

"ரேவதியுடைய அம்மாவை நான் கேட்டேன்னு சொல்லு" என்றாள் இந்து.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now