Part 19

1.5K 88 8
                                    

பாகம் 19

மறுநாள் காலை

தூக்கம் கலைந்த அர்ஜுன், தான் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து, திடுக்கிட்டு எழுந்தான். இந்துவின் நெஞ்சில், அவளை அனைத்தபடி படுத்திருப்பதை பார்த்து, முதல் நாள் நடந்தவற்றை நினைத்து பார்த்தான். அவள், அவனுடைய கட்டிலில், அவனை நெஞ்சில் ஏந்தியபடி படுத்திருந்ததை பார்த்த போது, அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. அவள் அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டாள். ஒருவேளை, அந்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக் கொண்டு இருந்திருந்தால், இந்நேரம் அவர்களுடைய முதலிரவு முடிந்துவிட்டிருக்கும். புன்னகையுடன், அவளை போர்வையால் போர்த்தி விட்டு, குளியல் அறையை நோக்கி சென்றான்.

சிறிது நேரத்தில், புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தவன், முதல் நாள் தான் இந்துவிடம் பேசியவற்றை நினைத்து புன்னகைத்தான். அப்பொழுது, அவனுடைய மடிக்கணினியின் அடியில் வைக்கப்பட்டிருந்த பத்திரம், அவன் கண்களில் விழுந்தது. சோபாவில் அமர்ந்தபடி அதைப் படிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில், அவனுடைய முகம், கலிங்கத்துப்பரணியில், ஜெயம்கொண்டாரல் வர்ணிக்கப்பட்டிருந்த பேயை போல் மாறியது. கண்ணாடியால் ஆன அந்த டீ பாயை, ஓங்கி ஒரு குத்து குத்தியதில், அது உடைந்து நொறுங்கியது. அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் இந்து.

தன்னுடைய தலையை, யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது அர்ஜுனுக்கு, அந்த பத்திரத்தின் இடையில், விவாகரத்து பத்திரத்தை பார்த்த பொழுது. இந்துவை நம்ப முடியாத பார்வை பார்த்தான் அர்ஜுன். அவனுடைய, கோபம்-கொந்தளிக்கும் முகத்தை பார்க்கவே பயந்தாள் இந்து. அவை, அர்ஜுனின் மூச்சை நிறுத்தும் நிமிடங்கள் என்று தான் கூற வேண்டும். தன்னுடைய பொறுமையை, கண்ணிமைக்கும் நேரத்தில், முழுதுமாய் இழந்தான் அர்ஜுன். நேரே கட்டிலின் அருகில் சென்று, இந்துவை கையை பிடித்து இழுத்தான். தன் கையில் இருந்த பத்திரத்தை அவளிடம் காட்ட, அது விவாகரத்து பத்திரம் என்பதை அறிந்து, அதிர்ந்தாள் இந்து.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now