Part 13

1.6K 95 8
                                    

பாகம் 13

ஓயாமல் அழுது கொண்டே இருந்தாள் ஹீனா. அவள் வாழ்வின் மிக கசப்பான உண்மையை, அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளுடைய அம்மா *இப்படிப்பட்டவள்* என்று அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு நாளாக, அவள் யாரை தன்னுடைய அப்பா என்று நினைத்திருந்தாளோ அவர் அவளுடைய அப்பா இல்லை. அவளைப் பெற்ற அப்பா யார் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவளுடைய அம்மா, அவளுடைய அப்பாவை உதறிவிட்டு, பணத்திற்காக வேறு ஒருவரிடம் வந்துவிட்டார் என்பது எவ்வளவு கேவலம்...! அவருடைய பணத்தாசையால் வேறொரு குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கிவிட்டார். அவளுடைய அந்த கீழ்தராமன செயலுக்காக மாஷா வருத்தப்பட்டு அவள் பார்த்ததே இல்லை... குற்றவுணர்ச்சி என்பது சிறுதும் இல்லை மாஷாவிற்கு. சீதா, மாஷாவின் மீது பொறாமைபடுவதாக அவள் நினைத்து கொண்டிருந்தாள். தன்னுடைய அம்மாவை அவமானப் படுத்துவதற்காக, அர்ஜுனின் மீது தீராத கோபத்தில் இருந்தாள் ஹீனா. எவ்வளவு தவறானவளாக அவள் இருந்திருக்கிறாள். தன்னை நினைத்து அவமானப்பட்டாள் ஹீனா.

தன் முதுகை யாரோ தொட அவள் எழுந்து அமர்ந்தாள். அது மாஷா என்பதை அவள் அறிவாள். பின்னால் திரும்பிப் பார்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

"நீ என் மேல வருத்தமா இருக்கேன்னு எனக்கு தெரியும்"

ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள் ஹீனா.

"நீ உண்மையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இது தான் நம்முடைய வாழ்க்கை. இது தான் நம்முடைய குடும்பம்."

"இல்ல... இது நம்ம குடும்பம் இல்ல. அவர் என்னுடைய அப்பா இல்ல. இது நம்ம வாழ்க்கை இல்ல. நீ இதை வேற ஒருத்தர்கிட்ட இருந்து பிடுங்கிட்டு, அவங்க வாழ்க்கையை நாசமாக்கிட்ட"

"அது நடந்து முடிஞ்சிடுச்சு. இப்ப அத பத்தி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்ல. நீ உன்னை தேத்திகிறது தான் சரி"

"அதுக்கு என்ன அர்த்தம்? வேறொருத்தரோட பணத்துல வெட்கமில்லாம என்னை வயிறு வளர்க்க சொல்றியா?"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now