பாகம் 26
மாஷாவின் கையிலிருந்த கைபேசி நழுவியது. அவர் அர்ஜுனை கொல்ல தீட்டியிருந்த திட்டம் படுத்துவிட்டது. அவனுக்கு பதிலாக, இந்து அந்த உணவை சாப்பிட்டு விட்டாள். அவளை அவனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்த பொழுதே கழுத்தை நெறித்தான். இப்பொழுது அவள் விஷத்தை வேறு தின்று தொலைத்து விட்டாள். இப்போது அந்த ராட்சசன் என்ன செய்யப் போகிறானோ. அவர் ராட்சஸன் என்று நினைத்தது, சாட்சாத் அர்ஜுனை தான்.
ஒரு பையில் தனது துணிமணிகளை திணித்துக் கொண்டு, தனது காரை நோக்கி ஓடினார். அந்தப் பையை அங்கிருந்த ஒரு காரின் உள்ளே போட்டுவிட்டு, அந்த காரில் கிளம்பிச் சென்றார்.
சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் சங்கர் இல்லத்தில் நுழைந்தது. தன் வீட்டிற்குள் போலீஸ் நுழைவதை பார்த்து குழம்பினார் சங்கர். அவர் தலைக்குள் அலாரம் அடித்தது. அவர் மாஷாவை அழைத்தார்.
"மாஷாஷாஷா..."
"அவங்க இங்க இல்ல" என்றாள் ஹீனா.
சங்கர் போலீசை பார்த்தார்.
"இது மாஷாவுக்கான அரெஸ்ட் வாரண்ட். அர்ஜுன் சாருடைய சாப்பாட்டில் விஷம் கலந்த குற்றத்திற்காக அவங்களை நாங்க அரஸ்ட் பண்ண வந்திருக்கோம். அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மிஸஸ் அர்ஜுன், ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க..." என்றார் இன்ஸ்பெக்டர்.
அதைக் கேட்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் அதிர்ச்சியடைந்தார் சங்கர்.
"என்னது...? அண்ணி விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டாங்களா? ஆனா ஏன்? நான் தான் அவங்ககிட்ட அதை பத்தி சொல்லி இருந்தேனே...?" என்று பாதறினாள் ஹீனா.
"ஆமா மேடம்... அவங்க அந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டுடாங்க. தயவுசெய்து மாஷா சங்கரை கூப்பிடுங்க"
"அவங்க ஃபார்ம் ஹவுஸ்க்கு போயிட்டாங்க. நீங்க அவங்களை அங்கே பார்க்கலாம்"
மாஷாவை பிடிக்க, போலீஸ் ஃபார்ம் ஹவுசுக்கு விரைந்தார்கள்.