பாகம் 38
கிரியினுடைய கைபேசியை போலவே, அவனுடைய முகமும் ஒளிர்ந்தது, ஹீனாவின் பெயரை தன் கைபேசி திரையில் பார்த்த பொழுது. ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் அந்த அழைப்பை ஏற்றான் கிரி.
"ஹலோ..." என்றான் தன் ஆர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.
"உங்ககிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்" அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.
"சொல்லுங்க" என்றான் ஆர்வமாக.
"என்னோட அம்மா, எங்க வீட்ல தான் ஒளிஞ்சிருக்காங்க" என்றாள் மெல்லிய குரலில்.
"உங்க வீட்ல ஒளிஞ்சிருக்காங்களா?" என்றான் பொய்யான அதிர்ச்சியை காட்டி.
"ஆமாம்... ரஹிம் தாத்தா தான் எங்களுக்கு சொன்னாரு"
"எங்களுக்குன்னா? சங்கர் சாருக்கும் தெரியுமா?"
"ஆமாம். அவர் இதைப் பத்தி அண்ணனுக்கு தெரியபடுத்த சொன்னாரு"
"ஓ..."
"என்னால உங்களை நேர்ல சந்திக்க முடியல. ஏன்னா, அப்பா வீட்ல இல்ல. நானும் வெளியே வந்துட்டா, அவங்க என்ன செய்றாங்கன்னு எங்களால கவனிக்க முடியாது."
"உங்களுடைய அக்கறைக்கு ரொம்ப நன்றி"
"இது சம்பந்தமா நான் எதாவது செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்களா?"
"அவங்களை வாட்ச் பண்ணுங்க. அவங்க எங்கேயாவது வெளியே போனா மட்டும் எனக்கு சொல்லுங்க"
"இல்ல.. நான் அவங்களை எங்கயும் போக விடமாட்டேன்"
"இல்ல. அவங்களை தடுக்காதீங்க. அவங்க ஏதோ ஒரு திட்டம் வச்சிருப்பாங்க. அவங்களை தடுத்தா, அதை நம்மால தெரிஞ்சுக்க முடியாது"
"அது என்னவா வேணும்னாலும் இருக்கட்டும்... அவங்க நினைக்கிறதை, இந்த தடவை நான் நடக்க விடமாட்டேன்"
"தயவு செய்து நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. அவங்களை நாங்க பாத்துக்குறோம்"
"ஏன்??? அவங்களால தான் எல்லா பிரச்சனையுமே... இனிமே அவங்களால எதுவும் நடக்கக் கூடாது... நாங்க நடக்கவும் விடமாட்டோம்"