Part 33

1.5K 90 7
                                    

பாகம் 33

*அந்த ஆள்* யார் என்பதை புரிந்து கொண்டாள் இந்து. அவன் தந்தையை தவிர வேறு யாரை பற்றி பேச போகிகிறான், அர்ஜுன்?

"நீ அவளுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. போன் பண்ணி கூப்பிடு. இன்விடேஷன் கொடுத்தா, அந்த ஆள், அதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்குவாரு. நீ புரிஞ்சுக்கவேன்னு நினைக்கிறேன்." என்ற அவன் குரலில் கண்டிப்பும் கனிவும் இருந்தது.

"உங்களுக்கு விருப்பம் இல்லன்னா, நான் ஹீனாவை கூப்பிட மாட்டேன்" என்றாள் இந்து.

"பரவாயில்ல... அந்தப் பொண்ணு அவங்க அம்மா மாதிரி இல்லாத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை" என்றான் அர்ஜுன்.

"அவ அவங்க அம்மா மாதிரி இல்லங்க"

"அதனால தான் அவளை உன்கிட்ட நெருங்க விடுறேன்... இல்லனா அவ நம்ம வீட்ல கால் வைக்க முடியாது. நான் மறுபடியும் சொல்றேன், அந்த ஆள்கிட்ட எந்த தொடர்பும் வேண்டாம்..."

"நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. நம்ம வாழ்க்கையில இது ரொம்ப பெரிய நிகழ்ச்சி. உங்க அப்பாவுக்கு அதுல கலந்துகனும்னு ஆசை இருக்கிறது நியாயம் தானே?" என்றாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

"எங்கம்மா, அவரைத் தன்னுடைய வாழ்க்கையாவே நினைச்சி மதிச்சாங்க. ஆனா அவர், அவங்களை தன்னுடைய வாழ்க்கையில ஒரு பகுதியா கூட நினைக்கல. அப்படிப்பட்ட ஒரு மனுஷன், என்னுடைய வாழ்க்கையில, ஒரு சின்ன பாகமா இருக்கவும் நான் விரும்பல..."

அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டான் அர்ஜுன்.

"எங்க அம்மாவுக்கு அப்புறம், நீ கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி, நீ என்னை வருத்தப்பட வைக்க மாட்டேன்னு நான் நம்புறேன். விஷயத்தோட ஆழத்தை புரிஞ்சுக்கோ, இந்து. என்னுடைய அடிமனசுல இருந்து நான் அந்த ஆளை வெறுக்கிறேன்... "

சரி என்று மெல்ல தலையசைத்தாள் இந்து. அந்த விஷயத்தின் ஆழம் அவளுக்குப் புரியாமல் இல்லை. அர்ஜுன் அவனுடைய அம்மாவை மிக அதிகமாய் நேசிக்கிறான். அதே நேரம், அவன் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறானோ, அந்த அளவிற்கு, அவனுடைய தந்தையை வெறுக்கிறான். அவனுடைய வாழ்க்கையில், இந்து வந்ததற்குக் காரணமே, அவன் அவனுடைய அம்மாவின் மீது கொண்டுள்ள அன்பு தானே... அது இந்துவிற்கு தான் தெரியுமே... அவளுடைய எண்ண சங்கிலி அறுபட்டது, அர்ஜுன் அவள் கன்னத்தை தட்டியபோது.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now