Part 15

1.6K 88 7
                                    

பாகம் 15

தங்களுக்கு எதிரில் இருக்கும் பெண், அர்ஜுனையும் இந்துவையும் பற்றி கேட்டவுடன், வீணாவும் வித்யாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

"நீங்க அர்ஜுனுடைய அம்மாவா?" என்றார் வித்யா.

"ஒரு விதத்துல..."

"அப்படின்னா?" கண்களை சுருக்கினார் வித்யா.

"அர்ஜுனுடைய அப்பா தான் என்னுடைய புருஷன்"

"ஓஹோ..."

"நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க?" மாஷா.

"என்னோட பொண்ணை அவன் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்"

"வலுக்கட்டாயமாவா?" என்றார் மாஷா, அவருக்கு ஏதும் தெரியாது என்பது போல்.

"ஆமாங்க... எங்க வீட்டை விற்க எங்களுக்கு அவனோட கையெழுத்து வேணும். எங்க வீடு, இந்து பெயரில இருக்கு. அதனால தான் நாங்க இங்க வந்திருக்கோம்."

"உங்க வீட்டை விற்க, அவனோட கையெழுத்து உங்களுக்கு எதுக்கு?"

"இந்துவுடைய அப்பா, அப்படித் தான் உயில் எழுதி வச்சிருக்காரு. இந்துவுடைய கையெழுத்தும்  அவ புருஷனோட கையெழுத்தும் இல்லாம, வீட்டை விக்க முடியாது"

"இந்துவுடையை அப்பாவா?" என்று வித்யாவின் வார்த்தையில் இருந்த வித்யாசத்தை கோடிட்டார் மாஷா.

"நான் அவரோட ரெண்டாவது மனைவி"

"ஓஹோ..."

மாஷாவிற்கு விஷயம் புரிந்தது. இவர்கள் இந்துவின் நலம் விரும்பிகளாக இருக்க வாய்ப்பு குறைவு. அவள் நினைப்பது போல இருந்தால், இவர்களை அவள் நன்றாகவே உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

"கல்லை வீசி தான் பார்ப்போமே... மாங்காய் விழிந்தால் லாபம். இல்லாவிட்டால், வேறு உபாயம் தேடிக்கொள்வது" என்று நினைத்தார் மாஷா.

"அர்ஜுன், எதுக்காக இந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியுமா?" மாஷா

"அவன் யாருன்னு கூட எங்களுக்குத் தெரியாது. அவனுடைய சரியான அட்ரஸ் கூட என்கிட்ட இல்ல. அப்படி இருக்கும் போது, அவன் எதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு எங்களுக்கு எப்படிங்க தெரியும்?"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now