Part 43

1.5K 86 11
                                    

பாகம் 43

*க்ரீச்* என்ற ஓசையுடன் காரை நிறுத்தினாள் ஹீனா. கார் கதவை சரியாக கூட மூடாமல் உள்ளே ஓடினாள். சங்கர் வரவேற்பறையில் இல்லாது போகவே, அவருடைய அறைக்குச் சென்றாள். அவரின் அறைக்குள் கால் வைக்கப் போனவள், சங்கர், ஒரு காலி நகை பெட்டியை வீசி எறிவதை பார்த்து திடுக்கிட்டாள்.

"என்ன ஆச்சி பா?"

"எல்லாத்தையும் அவ தொடச்சி எடுத்துக்கிட்டு போயிட்டா... 2 கோடி மதிப்புள்ள நகை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், எதுவுமே இங்க இல்ல. அவ என்ன செய்ய பிளான் பண்ணி இருக்கான்னு ஒன்னும் புரியல. அவ அர்ஜுனையோ, இந்துவையோ ஏதாவது செய்ய நினைச்சா, நிச்சயம் அவளை நான் கொன்னுடுவேன்" என்று சீறினார் சங்கர்.

"எல்லாத்துக்கும் மேல, எனக்கு அண்ணனை நெனச்சா தான் பயமா இருக்கு. அவருடைய நம்பிக்கையை அடைஞ்சிட முடியும்னு நான் நெனச்சேன். அம்மா அதுலயும் மண்ணைப் போட்டுட்டாங்க. அண்ணனுக்கு நம்ம என்ன பதில் சொல்றது...? அவர் நம்மளை நம்பவே போறதில்ல... அவரை ஏமாத்த,  நொண்டி சாக்கு சொல்கிறோம்னு நினைப்பாரு... "

"நிச்சயமா அவன் நம்மளை நம்ப மாட்டான். என்னை அவன் மன்னிக்க மாட்டான்னு எனக்கு தெரியும். ஆனா, உனக்காவது அவங்க கூட பழக ஒரு வாய்ப்பு கிடச்சுதேன்னு நான் சந்தோஷப்பட்டேன்... உங்க அம்மா அதையும் கெடுத்துட்டா... அவ நம்மளை நிம்மதியா இருக்க விடவேமாட்டா... நான் இன்னும் அவளால என்னென்ன எல்லாம் அனுபவிக்கப் போறேனோ தெரியல..." அவருடைய கோபம், கண்ணீராய் உருவெடுத்தது. தொப்பென்று தரையில் அமர்ந்து, தன் தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பா, நமக்கு இன்னமும் கூட வாய்ப்பு இருக்கு"

"எப்படி? " என்றார் தன் தலையை நிமிர்த்திய படி.

"போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்..."

துள்ளி எழுந்தார் சங்கர்.

"இதை விட்டா வேற வழியே இல்ல. அம்மாவோட நகை போட்டோசை நம்ம போலீஸ்ல கொடுக்கலாம். அதை விக்க வர்றவங்களை போலீஸ் பிடிப்பாங்க... அந்த ஆள் மூலமா, நம்மால அம்மாவை பிடிக்க முடியும்"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now