Part 29

1.6K 87 7
                                    

பாகம் 29

"என்னை விட்டுட்டு போகப் போறியா இந்து?" என்ற கேள்விக்கு, அவளுடைய கண்களில் அவன் பதில் தேடினான்.

இந்துவுடைய பதில் என்னவாக இருந்திருக்கும்? வித்யா, வீணா போன்ற மோசமான பெண்களையே விட்டுவிட்டு வர அவள் நினைத்தது இல்லையே... அப்படியிருக்க, அர்ஜுனை அவள் உதறி தள்ளி விடுவாளா என்ன?

*இல்லை* என்று தலையசைத்தபடி அவன் கன்னம் தொட்டு, அவன் முன் அவளும் மண்டியிட்டு அமர்ந்தாள்.

"நான் உங்களை விட்டு போகமாட்டேன். நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன். ஏன்னா, நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன். நீங்க என்னுடைய புருஷன்ங்குறதல மட்டும் இல்ல. நான் ஏன் உங்களை காதலிக்கிறேன்னா, என்னை நானே காதலிக்காதப்போ நீங்க என்னை காதலிச்சிங்க. உங்க அளவுக்கு என்னை யாருமே நேசிச்சது இல்லை. நீங்க என்னை ரொம்ப ஸ்பெஷலா மட்டும் உணர வைக்கல்ல, பாதுகாப்பாகவும் உணர வச்சிங்க. உங்களை அடைய நான் கடுமையா முயற்சி பண்ணது ஏன்னா, நீங்க எனக்கு கிடைச்ச பொக்கிஷம். நான் உங்களை ஸ்பெஷலா உணரவச்சது ஏன்னா, நீங்க ஸ்பெஷல் தான். நீங்க சுயநலவாதி இல்ல. நான் உங்களுடைய தூய்மையான அன்புக்கு தகுதியானவளான்னு தெரிஞ்சிக்க விரும்பினீங்க. அவ்வளவு தான்..."

அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

"நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன். நீங்க இல்லன்னா என்னுடைய இதயம் துடிக்காது. நீங்க எனக்கு வேணும்... எப்பவும்..."

"உனக்கு என் மேல கோவம் இல்லையா?"

"எதுக்கு?"

"நான் உன்னை ரொம்ப டெஸ்ட் பண்ணிட்டேன்"

"படிக்காத பிள்ளைங்க தான் டெஸ்ட்ன்னா பயப்படுவாங்க. படிக்கிற பிள்ளைங்க, பரிட்சையை தன்னுடைய திறமையை வளர்த்துக் பயன்படுத்துவாங்க." என்று புன்னகைத்தாள்.

திருப்திகரமான புன்னகையுடன் அவளை அன்பாய் அணைத்துக் கொண்டான் அர்ஜுன். அவளும் அவன் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டாள்.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now