Part 52

1.7K 92 14
                                    

பாகம் 52

எதிர் பார்த்தபடியே சங்கருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், மாஷாவால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தான் அர்ஜுன். அதன்படியும், மாஷாவின் மகளான ஹீனாவின் வாக்குமூலத்தின் படியும் சங்கருடைய தண்டனை காலம் வெகுவாய் குறைந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சென்று பார்த்து வந்தான் அர்ஜுன், இந்துவின் நச்சறிப்பினால். கிரியும் ஹீனாவும் கூட, அவரை சந்திப்பதை நிறுத்தவில்லை. ஆனால் எவ்வளவு கெஞ்சிக் கேட்ட போதிலும், இந்துவை மட்டும் சிறைச்சாலை பக்கம் வர அர்ஜுன் அனுமதிக்கவில்லை.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து

சிறைச்சாலைக்கு சென்று தன் தந்தையை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"அஜ்ஜு, அப்பா ஜெயிலுக்கு போய் ஒன்றரை வருஷம் ஆயிடுச்சு... நான் ஒரு தடவை கூட அவரை வந்து பார்க்கவே இல்ல. அவர் என்ன நினைக்கிறாரோ தெரியல"

ஒன்றும் கூறாமல் தனது டையை சரியாய் கழுத்தில் பொருத்தினான் அர்ஜுன்.

"என்னை மட்டும் ஏன் உங்க கூட கூட்டிக்கிட்டு போக மாட்டேங்கிறீங்க? அவர் என் மேல வருத்தப்பட மாட்டாரா? ஹீனாவும், கிரி அண்ணனும் கூட அவரைப் போய் பாக்குறாங்க... நான் மட்டும் தான் அவரை இன்னும் பார்க்கவே இல்லை"

"அவர் ஜெயில்ல இருக்காரு... பிக்னிக் ஸ்பாட்ல இல்ல... நீ போய் பாக்குறதுக்கு..."

"இருந்தா என்னங்க? எதுக்காக நீங்க என்னை அங்க வர விட மாட்டேங்கறீங்கன்னு எனக்கு புரியவே இல்ல"

"நீ அந்த மாதிரி இடத்துல அடி எடுத்து வைக்கிறது எனக்கு பிடிக்கல"

"அதான் ஏன்னு கேக்குறேன்"

"ஏன்னா அது கிரிமினல்ங்க இருக்கிற இடம்... உன்னை மாதிரி தூய்மையான மனசு உள்ளவங்க, அந்த இடத்தில வீசுற காத்தை கூட சுவாசிக்கக் கூடாது... புரிஞ்சுதா உனக்கு...?"

இதய சங்கிலி (முடிவுற்றது )Tahanan ng mga kuwento. Tumuklas ngayon