Last part

2.3K 118 45
                                    

இறுதி பாகம்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,

அபிமன்யு, அம்மா பிள்ளை தான் என்றாலும், முழுக்க முழுக்க அப்பா பிள்ளையாகவும் இருந்தான். அவன் இந்துவுக்கு எதிராக அர்ஜுனுடன் சேர்ந்துகொள்ளவும் தவறவில்லை... இந்துவுடன் சேர்ந்து அர்ஜுனை கிண்டல், கேலி செய்யவும் தவறவில்லை.

பள்ளியில் இருந்து வீடு திரும்பினான் அபிமன்யு.

"மாம்... டாட் எங்க?" என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தான்.

"மணி நாலரை தான் ஆகுது. அவர் அஞ்சு மணிக்கு மேல தான் வருவாரு. போய் முகம், கை, கால் கழுவிட்டு வா..."  என்று கூறியபடி சங்கரிடம் தேனீர் குவளையை நீட்டினாள் இந்து.

"என்ன விஷயம் அபி? நீ வரும் போதே உங்க அப்பாவை தேடிக்கிட்டு வர...?" என்றார் சங்கர்

"நான் அதை டாட் கிட்ட தான் சொல்லுவேன்" என்று தன் அறையை நோக்கி ஓடினான்.

"இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஓவராத் தான் போறாங்க" என்றாள் இந்து.

"அதுக்காக நீ சந்தோஷம் தான் படணும்... அபி மட்டும் உன்கிட்ட க்ளோசா இருந்திருந்தா, உன்னோட பொறாமைக்கார புருஷன், உன்னை பாடா படுத்தி இருப்பான்" என்று அவர் சிரிக்க, இந்துவும் சிரித்தாள்.

"அபி அவர்கிட்ட தான் க்ளோசா இருக்கான். அப்படி இருந்தும், சில நேரம் அவர் பொறாமைப்பட தான் செய்றார்..."

"அது தான் அர்ஜுன்" என்று சிரித்தார். சங்கர்.

அதே நேரம் பரபரப்பாய் உள்ளே நுழைந்தான் அர்ஜுன். சங்கரும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அபி வந்துட்டானா?" என்றான் அர்ஜுன்

"இப்ப தான் வந்தான்"

"அபிஇஇஇ.... " என்று அவன் உரத்த குரலில் அழைத்தான்.

"என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?"  என்றார் சங்கர்.

"இன்னைக்கு காலிகிராஃபி காம்ப்படிஷன் ரிசல்ட் வரப் போகுதுன்னு அபி சொல்லியிருந்தான்..."

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now