Part 17

1.5K 94 12
                                    

பாகம் 17

இந்துவின் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்தாள் ரம்யா.

"என்ன ஆச்சு, ஏன் சோகமா இருக்கீங்க?"

" அம்மாவும் வீணாவும் இங்க வந்திருக்காங்க"

" அவங்க வந்துட்டாங்களா?"

 " வந்துட்டாங்க"

"நீங்க தானே அவங்கள வர சொன்னிங்க...? அப்படின்னா நீங்க சந்தோஷமா தானே இருக்கணும்?"

" ஏன்னே தெரியல, ஏதோ தப்பு நடக்க போற மாதிரி மனசு சங்கடமா இருக்கு"

" ஏன் உங்களை நீங்களே குழப்பிகிறீங்க? ரிலாக்ஸா இருங்க. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் செய்யறேன்"

"அவகளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கணும்"

" சமையல் ஆயிடுச்சு. நானும், வேலன் அண்ணனும் பரிமாறுறோம்"

" நானும் வரேன்"

சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு, இந்து உணவு மேஜைக்கு சென்றாள். தனது நடையின் வேகத்தை குறைத்து விட்டு, வேலனிடம் ரகசியம் உரைத்தாள் ரம்யா.

"அண்ணா, நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க மேல நீங்களும் ஒரு கண் வையுங்க"

" நான் பாத்துக்குறேன்மா"

"அவங்களுடைய நடவடிக்கையில, ஏதாவது உங்களுக்கு வித்தியாசமா பட்டா, என்கிட்ட சொல்லுங்க"

" சொல்றேன்மா "

இந்துவை பின்தொடர்ந்து அவர்களும் உணவு மேசைக்கு வந்தார்கள். உணவை மேஜையின் மீது வைத்துவிட்டு, சற்று தூரத்தில் நின்று கொண்டாள் ரம்யா, அவர்கள் பேசுவது அவளுக்கு கேட்கும் வண்ணம்.

இந்து அவர்களுக்கு உணவைப் பரிமாறினாள்.

" நீ உண்மையிலேயே சந்தோஷமா தான் இருக்கியா? " என்றார் சாப்பிட்டுக்கொண்டே வித்யா.

" ஆமாம்மா. நான் சந்தோஷமா இருக்கேன் "

"நல்லதாப் போச்சு"

" நீங்களும் என் கூட இங்கேயே இருக்கலாம்மா"

ஒரு நிமிடம், வித்யாவின் புத்தி அதற்கு ஆசைப்பட்டது. வீணாவின் முகமோ சந்தோஷத்தில் ஒளிர்ந்தது. இங்கு தங்கினால், அர்ஜுனை வளைத்துப் போடும் வாய்ப்பு அவளுக்கு நிறைய கிடைக்கும் அல்லவா?அதை அவளால் செய்ய முடியாதா என்ன?

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now