Part 20

1.5K 87 8
                                    

பாகம் 20

கிரி சொன்னதைக் கேட்டு கவலை அடைந்தாள் ரம்யா.

"உன்னுடைய ஜாபை ரிசைன் பண்ணிட்டு, சீதாராணி இல்லத்திலிருந்து நீ கிளம்பிடு"

"உனக்கு என்ன நட்டு கழண்டு போச்சா?"

"இல்ல... இனிமே நீ அங்க இருக்க விரும்ப மாட்ட..."

"ஆனா ஏன்?"

"ஏன்னா அர்ஜுன் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கான். அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும்ங்குற விஷயம், இந்துவுக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறான்"

"ஏன்?"

"நம்ம அவனை ஏன்னு கேள்வி கேட்க முடியாது"

"இந்து ஒரு அப்பாவி..."

"எனக்கு தெரியும். அதனால தான் உன்னை வேலையை ரிசைன் பண்ண சொல்றேன். நீ நிச்சயமா அவங்க கிட்ட உண்மைய உளறிடுவ"

"இந்த நிலைமையில என்னால இந்துவை தனியா விட முடியாது.  அவங்களுக்கு யாராவது ஒருத்தர் துணையாக இருக்கனும்..."

"ஆனா, அர்ஜுன் உன்னை வார்ன் பண்ணியிருக்கான்"

"சத்தியமா நான் இந்துகிட்ட எதையும் சொல்ல மாட்டேன்"

"நம்ம ரெண்டு பேரும், அர்ஜுனுக்கு கீழே வேலை செய்யுறோம்ங்குறதை நீ மறந்துடாத. அவனுடைய பேச்சை மீறினா, அவன் மன்னிக்கவே மாட்டான்"

"ம்ம்ம் "

"ஜாக்கிரதையா இரு. தயவுசெய்து இந்துவை சமாதானப்படுத்து"

"எனக்கு தெரியும்"

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.
....

வீட்டிற்கு, அர்ஜுன் வந்த பொழுது அங்கு மயான அமைதி நிலவியது. ஒரு நிமிடம் அவன் பயந்தான். இந்துவை அவளுடைய சித்தி, அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ?இங்கும் அங்கும் அவன் கண்கள் அலை பாய்ந்தது. அப்பொழுது வித்யாவின் குரல் அவன் காதில் விழுந்தது. அவருடைய கத்தலை சிறிதும் பொருட்படுத்தாமல், அமைதியாய் நின்றிருந்தாள் இந்து, அவருக்கு பதிலளிக்க விருப்பமின்றி. தன் கையிலிருந்து, இந்து முழுவதுமாய் நழுவி விட்ட நிதர்சனத்தை உணர்ந்தார் வித்யா.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now