Part 14

1.6K 94 9
                                    

பாகம் 14

மறுநாள் காலை

குளித்து முடித்து, அறையை விட்டு வெளியே வந்தாள் இந்து. அந்த இல்லம் முழுவதும் பூக்களாலும், வண்ண கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை பார்த்து பிரமித்து போனாள் அவள். ரம்யா, பூஜை அறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்ததை பார்த்து, அவளிடம் வந்தாள்.

"இன்னைக்கு ஏதாவது விசேஷமா, ரம்யா?" என்றாள்.

"இந்த அரண்மனையையோட மகாராணிக்கு இன்னைக்கு பிறந்தநாளாம்" என்றாள் ரம்யா புன்னகையுடன்.

ஒரு நிமிடம் யோசித்து நின்றவள்,

"அவருடைய அம்மாவுக்கும் இன்னிக்கு தான் பிறந்த நாளா?" என்றாள்.

*மகாராணி* என்னும் அந்தஸ்தில் தன்னை வைத்து பார்க்கும் அளவிற்கு அவள் பேராசைக்காரி இல்லை அல்லவா....?

"யாருடைய அம்மாவுக்கு?" என்றாள் ரம்யா.

"இப்போ நீ தானே சொன்ன, இந்த வீட்டோட மகாராணிக்கு பிறந்தநாளுன்னு...?"

"நான் சொன்னது உங்களைத் தான்"

அதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றாள் இந்து. அளவில்லாத அதிர்ச்சியுடன் ரம்யாவை ஏறிட்டாள். இந்த அலங்காரம் எல்லாம் அவளுக்காக செய்யப்பட்டதா? இந்த வீட்டில், அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறதா?

"நீ இப்ப என்ன சொன்ன?" என்றாள் அதிர்ச்சியுடன்.

அவளுக்கு பதில் அளிக்காமல், அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்து சென்றாள் ரம்யா.

"ரம்யா நில்லு... எனக்கு பதில் சொல்லிட்டு போ..."

அப்பொழுது அவள் பின்னால் இருந்து,

"ஹாப்பி பர்த்டே" என்ற ரம்மியமான குரலை கேட்டு, திரும்பினாள்.

அவளுக்கு மிக அருகில் அர்ஜுன் நின்று கொண்டிருப்பதை பார்த்து தடுமாறி,பின்நோக்கி நகர, கால் தடுக்கி விழப் போனவளின் தோள்களை கெட்டியாக பற்றிகொண்டான் அர்ஜுன்.
மீண்டும், அவனுடைய பேசும் கண்களில் காணாமல் போனாள் இந்து. அவள் தோள்களில் இருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்டான் அர்ஜுன், தன்னை அவள் கண்களில், தொலைத்துவிடாமல் நிலைநிறுத்திக் கொள்ள.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now