9 அர்ஜுனின் செயல்

1.7K 92 7
                                    

9 அர்ஜுனின் செயல்

கோவிலின் முன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் அர்ஜுன். அவனுக்காக காத்திராமல் காரை விட்டு கீழே இறங்கி கோவிலுக்குள் சென்றாள் இந்து. அவள் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிய பிறகு, ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை அர்ஜுன். அது அவன் உயிரை நடுங்கச் செய்த நொடிகள்.

அவள் கூறிய வார்த்தைகள் அவனை வாட்டி வதைத்தது. அவன் அவ்வளவு மோசமானவனா...? ஒரு பெண், அவனை கணவனாக ஏற்றுக் கொள்வதற்கு பதில், சாவதே மேல் என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கொடூரமானவனா? ஒரு வேளை அவள் கூறியதை போல அவள் ஏதாவது செய்துவிட்டால்? அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. அவனால் இந்துவை இழக்க முடியாது... இழக்கவும் கூடாது...

தனது கைப்பேசியை எடுத்து, கிரிக்கு ஃபோன் செய்தான். கிரி, அவனுடைய அழைப்பை உடனே ஏற்றான்.

"சொல்லு அர்ஜுன்..."

"இந்துவை கவனிச்சுக்க எனக்கு ஒரு பொண்ணு வேலைக்கு வேணும்..."

"இந்துவை கவனிச்சுக்கவா?"

"ஆமாம்... அந்த பொண்ணு, இந்துகிட்ட ஃபிரண்டு மாதிரி பழகனும், அவளுக்கு வேண்டியதை கவனிக்கணும்... இருபத்திநாலு மணி நேரமும் அவ கூடவே இருக்கணும்... புரிஞ்சிதா?"

"சரி"

"இந்து கூட இருந்தாலும், அவள் எனக்கு உண்மையா இருக்கணும். இந்துவை பத்தி எல்லா விஷயத்தையும் எனக்கு அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். அவளோட மனநிலை மாற்றத்தை கவனிக்கணும். ஆனா,
இந்துவுக்கு அது தெரியக்கூடாது"

அர்ஜுனுக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டான் கிரி.

"ஓகே அர்ஜுன்"

அவர்கள் அழப்பை துண்டித்துக் கொண்டார்கள். கிரி, அவனுடைய பள்ளி தோழிக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹாய் கிரி"

"ஹாய் ரம்யா"

"லண்டன் எப்படி இருக்கு?"

"யாருக்கு தெரியும்?"

"அப்போ நீ லண்டன்ல இல்லையா?"

இதய சங்கிலி (முடிவுற்றது )حيث تعيش القصص. اكتشف الآن