UNALAE... UNAKAGAVAE...
Ep 34சக்கரவர்த்தி அனுப்பிய வீடியோ பதிவை பார்த்த உடனே சுந்தரம் மூர்த்தியின் குடும்பம் ஏதோ பிரட்சனையில் விழ போகிறது என்று எண்ணி தன் அடியாட்களை அழைத்து சிவபாலன் ஐயும் அவன் அங்கே வைத்து அந்த பொட்டலங்களையும் எடுத்து வருமாறு கூறினார்...
அவர்களும் அங்கே சென்று சக்ரவர்த்தி இன் உதவியோடு அங்கு வைத்திருந்த பொட்டலங்களில் அவன் கலந்த அந்த சில பொட்டலங்களை தேடி எடுத்து கொண்டு சிவ பாலனை இழுத்து வந்தனர்...
சுந்தரம்: டேய்... யார் டா நீ???
சிவபாலன் அமைதியாக இருந்தான்...
சுந்தரம்: சொல்ல போறியா இல்ல உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுட்டு பேசவா???
சிவபாலன் இன் அமைதி சுந்தரத்தை இன்னும் கோவ பட செய்தது...
சுந்தரம் தன் ஆட்களிடம் கண் ஜாடை செய்ய அவர்கள் அவன் அருகில் வந்து ஊமை அடிகளை அடித்தனர்...
வலி தாங்காமல் அவன் அனைத்தையும் கூறி விட்டான்...
சுந்தரம் சக்கரவர்த்தி ஐ அழைத்தான்...
சுந்தரம்: நீ நான் சொல்லும் வரை அங்கே இரு... மூர்த்தி கடையில் புதுசா ஏதாச்சும் நடந்தா உடனே எனக்கு தெரிய படுத்து...
சக்கரவர்த்தி: சரிங்க ஐய்யா... நான் வரேன்...
பின் சுந்தரம் அந்த ஜனா வீட்டு நிலை பற்றி அறிய விரும்பினான்...
அதனால் அவன் ஜனாவின் வீட்டில் இருக்கும் கலைவாணியை பார்த்து பேசி என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டு வருமாறு மணிமேகலை இடம் சொல்ல... அவளும் அதற்க்கு சம்மதித்தாள்...
மறுநாள் காலை அவர்களை பார்த்து பேசுவதாக சொன்னால் மணி...
மூர்த்தி கைதாகி இருப்பதையும் அவன் தம்பிகள் தடு மாறி நடுரோட்டில் நிற்பதையும் பார்த்து ரசித்து கொண்டு இருந்த பேச்சி யை யாரோ கூபிட்டனர்...
அம்மா அம்மா...
கண் விழித்த பேச்சி என்ன என்று கோவமா கேட்க...
![](https://img.wattpad.com/cover/224989483-288-k459238.jpg)
YOU ARE READING
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
General FictionThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...