UNALAE... UNAKAGAVAE...
Ep 81கதிர் சிசீராவின் தாய் ஐ எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றியும் அது அந்த பேச்சிக்கு தெரியாமல் எப்படி செய்வது என்பதை பற்றியும் யோசித்து கொண்டு இருக்க...
அருகில் இருந்த ஒரு 55 வயசு இருக்கும் பெண்மணி கதிரிடம் வந்தார்...
பெண்: தம்பி... என்னிடம் போன் இல்லை... அதனால் இந்த நெம்பருக்கு போன் பண்ணி நான் இங்க ஆஸ்பித்திரிக்கு வந்து இருக்கேன் என்று சொல்லுறீங்கலா??? என்று வேண்டுகோள் விடுக்க...
கதிர் அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்கி அதை தொடர்பு கொள்ள முயற்சித்தார்...
ஆனால் அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக அறிவிப்பு வர...
கதிர்: அம்மா... இந்த நம்பர் க்கு கால் போகல... வேற நம்பர் இருக்கா அம்மா...
பெண்: இல்லயே தம்பி... இந்த நெம்பர் மட்டும் தான் தம்பி என் பையன் குடுத்தான்...
கதிர்: சரி மா... நான் இங்கேயே தான் இருப்பேன்... நீங்கள் எல்லாத்தையும் முடித்து விட்டு வாங்க... அதற்குள் உங்கள் மகன் எண்ணை கூப்பிட்டாள் விவரம் சொல்லி வர சொல்லுகிறேன்...
பெண்: ஆகட்டும் தம்பி... என் பையன் பேரு பாண்டியன்... அவன் கூப்பிட்டான் என்றால் விவரம் சொல்லி இங்கேயே வர சொல்லுங்க பா...
கதிர் அந்த பெயரை கேட்டு ஒரு நிமிடம் மௌனமாய் நிற்க...
பெண்: என்ன தம்பி அப்படியே கல் மாறி நினுட்டீங்க???
கதிர் நிதானித்து கொண்டு...
கதிர்: என் அப்பா பெயர் கூட பாண்டியன் தான் அம்மா... அதான் அந்த பெயரை கேட்டதும் என் அப்பாவின் நியாபகம் வந்து விட்டது... என்று சொல்ல சொல்ல அவனின் கண்ண முன் அவன் வாழ்வின் அந்த கருப்பு நாள் வந்து சென்றது...
அவனை போலீஸ் கைது செய்தனர் என்ற செய்தி கேட்டு அவர் மரணம் அடைய...
லக்ஷ்மி அம்மாவுக்கு கை கால் வராமல் போக...
அவனின் குடும்பம் முழுவதும் அவனை வெறுக்க...
![](https://img.wattpad.com/cover/224989483-288-k459238.jpg)
YOU ARE READING
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
General FictionThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...