UNALAE... UNAKAGAVAE...
Ep 40மூச்சு விட முடியாமல் சிரமம் கொண்ட அவள் வெகு நேர போராட்டத்துக்கு பின் உண்மை சொல்ல ஒப்பு கொண்டு செய்கை செய்தாள்...
அவள் ஒப்பு கொண்டதும் தான் கதிர் அவள் கழுத்தில் இருந்து கைகளை எடுத்தான்...
கதிர்: சொல்லு யார் நீ??? எதுக்காக இங்க வந்து இப்படி எல்லாம் செஞ்ச???
சுமதி: என் பேர் சுமதி...
ரைட்: அந்த ஈர வெங்காயம் தான் எங்களுக்கு தெரியுமே... மேல சொல்லு...
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் பொழுதே ஜீவா அந்த அறைக்கு வந்தார்...
ஜீவா: யார் டா இந்த பொண்ணு???
கதிர்: அதை தான் அன்னே விசாரித்து கொண்டு இருகொம்...
சுமதி: எங்க வீட்ல நான், எங்க அம்மா, என் தங்கை வானதி... எனக்கு அப்பா இல்லை... அதனால் எங்க அம்மா இந்த ஜனா ஐய்யா வீட்டிலும் நாங்கள் இருவரும் அவரது மில்லிலும் வேலை செய்தோம்... அப்பொழுது இந்த ராமையா என் மேல் ஆசை பாட்டார்... எனக்கும் அவர் மேல் ஆசை வந்தது... ஆனா என் அம்மா அதற்க்கு ஒப்பு கொள்ள வில்லை... ராமையா வுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மகன் இருக்கிறார்கள் என்று என்னை அவரிடம் நெருங்க விட வில்லை... ஒரு நாள் என் அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டார்... அப்போது அவரை அடக்கம் செய்ய கூட எங்களிடம் காசு இல்லை... இந்த ராமையா தான் எங்களுக்கு உதவி செய்தார்... அன்று முதல் நாங்கள் இவருக்கு கடன் பட்டோம்... எங்களுக்கு இவர் செய்த அந்த உதவி எங்களை இவருக்காக எதுவும் செய்யும் அளவுக்கு மாற்றியது... அப்பொழுது தான் ராமையாவின் தங்கை இறந்ததாகவும் அதற்க்கு ஜனா தான் காரணம் என்றும் தெரிந்தது... அதனால் அவரை பழி வாங்க எண்ணி பல முறை அவரை கொலை செய்ய முயற்சி செய்தேன்... ஒவ்வொரு முறையும் அவர் தப்பிக்க கடைசியில் அவர் மகனை கொன்றால் என்ன என்று என் தங்கை அவருக்கு யோசனை கொடுத்தால்... அவரும் அதை அவர் பில்லை மூலம் செய்ய பழி கதிர் மேல் விழுந்தது...
BẠN ĐANG ĐỌC
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
Tiểu Thuyết ChungThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...