UNALAE... UNAKAGAVAE...
Ep 80கதிர் முல்லைக்கு நடந்த எதையும் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று எழில் சொன்ன யோசனையை சரி என்று எண்ணி கொண்டு இருக்க...
இங்கே குன்னக்குடி இல் அனைவரும் கிளம்பி குண்ணகுடி முருகன் கோவிலை சென்று அடைந்தனர்...
கார் மேலே கோவிலுக்கு நேராக செல்ல....
கோவில் வண்டி நிறுத்தும் இடத்தில் போய் வண்டி நின்றது...
அனைவரும் கீழே இறங்கி கோவிலுக்கு சென்று அங்கே சுவாமி தரிசனம் பார்த்து விட்டு...
கதிர் முல்லை பெயரிலும், மீனா ஜீவா பெயரிலும் அற்ச்சனைகளை செய்து விட்டு சற்று நேரம் மண்டபத்தில் அமர வந்தனர்...
கண்ணன் லக்ஷ்மி அம்மாவுக்கு துணையாக மண்டபத்தில் இருந்து கொண்டு இவர்களின் வருகைக்காக காத்து இருந்தான்...
கண்ணன்: என்ன அண்ணி... தரிசனம் எல்லாம் முடிஞ்சுத???
தனம்: ஆமா டா கண்ணா... நல்ல தரிசனம் இல்ல மாமா???
மூர்த்தி: ஆமா டா...
கண்ணன்: சரி சரி... பிரசாதம் எங்கே???
தனம்: இந்த டா... என்று அவன் நெற்றியில் விபூதி வைத்து விட்டால்...
லக்ஷ்மி அம்மாவிடம் விபூதியை நீட்ட...
அவரே அவர் நெற்றியில் வைத்து கொண்டார்...
இருப்பினும் சுவாமி தரிசனம் காண முடியவில்லை என்ற வருத்தம் இருக்க...
தனம்: நல்ல தரிசனம் மாமா... விசேஷ நாள்ள வந்து அவசர அவசரமாக பார்த்து விட்டு இப்போ எவ்ளோ நிதானமாக பார்த்து மனசுக்கு நிறைவாக இருந்தது மாமா...
ஜீவா: வெள்ளிக்கிழமை ல நீங்க கோவிலுக்கு போவீங்கள்ள அண்ணி???
தனம்: ஆமா ஜீவா... ஆனா அப்பவும் இதே மாறி எல்லாம் பார்க்க முடியாது... கூட்டம் நிறையா இருக்கும்... நடை சாத்தும் வரை கூட்டம் இருக்கும்... அதனால் இப்படி எல்லாம் நின்று பார்க்க கூட முடியாது... நடந்து கொண்டே பார்த்து செல்ல வேண்டியது தான்...
![](https://img.wattpad.com/cover/224989483-288-k459238.jpg)
YOU ARE READING
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
General FictionThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...