பணமே..

1 0 0
                                    

#பணமே..
உனக்குத் தான் எத்தனை பெயர்கள் ?

🔰
அர்ச்சகருக்கு கொடுத்தால்
#தட்சணை என்றும்,

🔰
கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்,

🔰
யாசிப்பவருக்குக் கொடுத்தால்
#பிச்சை என்றும்,

🔰
கல்விக் கூடங்களிலோ
#கட்டணம் என்றும்,   

🔰
திருமணத்தில்
#வரதட்சணை என்றும்,

🔰
திருமண விலக்கில்
#ஜீவனாம்சம் என்றும்,

🔰
விபத்துகளில் இறந்தால்,
#நஷ்டஈடு என்றும்,

🔰
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்,
#தர்மம் என்றும்,

🔰
நாமாக விரும்பி ஏழைகளுக்கு கொடுத்தால் #தானம் என்றும்,

🔰
திருமண வீடுகளில் பரிசாக 
#மொய் என்றும்,
    
🔰
திருப்பித்தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால், அது
#கடன் என்றும்,

🔰
திருப்ப தர வேண்டாம் என
இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு என்றும்,

🔰
விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை என்றும்,
    
🔰
நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம் என்றும்,
     
🔰
அரசுக்குச் செலுத்தினால்
#வரி என்றும்,

🔰
அரசு, பொது, தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது
#நிதி என்றும்,
     
🔰
செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்,

🔰
தினமும் கிடைப்பது
#கூலி என்றும்,
   
🔰
பணி ஓய்வு பெற்றால் கிடைப்பது  #ஓய்வூதியம் என்றும்,

🔰
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும், கொடுப்பதும்
#லஞ்சம் என்றும்,
    
🔰
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல் என்றும்,

🔰
வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்,

🔰
தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு
#முதல் என்றும்,

🔰
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்,
    
🔰
குருவிற்குக் கொடுக்கும்போது
#குருதட்சணை என்றும்,

🔰
ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ் என்றும்,

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்த பணத்திற்கு மாற்றாக...
வேறொன்றும் இப்புவியில் இல்லை !

பணம் !
பணம் !!
பணம் !!!

Naina Yasmin
அவர்களின் பதிவிலிருந்து...

Naina Yasminஅவர்களின் பதிவிலிருந்து

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
UpanishadsWhere stories live. Discover now