அனுமனுக்கு வாகனமா?

0 0 0
                                    

அனுமனுக்கு வாகனமா?

நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நன்கு கவனித்துப் பார்த்தால், அரிதினும் மிக அரிதாக ஹனுமான் கோவில்கள் சிலவற்றில் ஹனுமானின் சிலைக்கு முன்புறமாக ஒட்டகம் வாகனமாக அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பெரும்பாலும் யாரும் கவனித்திருக்க மாட்டோம்.

ராமாயணம் மற்றும் பிரசார சம்ஹிதா ஆகியவற்றில் பல இடங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். காற்றின் வேகத்தை விடவும் வேகமாகப் பறந்து செல்கிறார். குறைந்த நேரத்தில் நீங்கள் சிறிதும் நினைத்துப் பார்க்காத தூரத்தைக் கடந்து விடுவார். குறிப்பாக கடலையே அசால்டாக தாண்டி, ஸ்ரீலங்காவைச் சென்று அடைந்தவர் என்றெல்லாம் படித்திருப்போம்.

​காற்றை விட வேகம்

அதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து, இமயமலைக்கு அவ்வளவு வேகமாக வந்து சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றவர், அதேபோல் பாதாள லோகத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு என பல ஆயிரம் ஜெட்டுகளின் வேகத்தில் பறந்து சென்றவர் என்பதையும் நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படி யாராலும் கணக்கிடவே முடியாத வேகத்தில் பறந்து செல்ல முடிகிற ஆற்றல் கொண்ட ஹனுமன் ஏன் இருப்பதிலேயே மெதுவாகச் செல்லும் ஒட்டகத்தை வாகனமாக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி யாருக்கும் எழாமல் இருக்காது.

​இதிகாச உண்மைகள்

வால்மீகி ராமாயணம் மற்றும் பிரசார சம்ஹிதாவில் வானரக் கூட்டங்கள் கிட்கிந்தாவில் உள்ள பம்பையைச் சுற்றி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது துங்கபத்திராவின் கிளை நதி என்று கூட சொல்லலாம். மொத்தம் 5 சரோவர்கள் உண்டு. அதில் பம்பா சரோவரும் ஒன்று. மற்ற நான்கும் எங்கெங்கு இருக்கின்றன என்று தெரியுமா?

திபெத்தில் கைலாய மலைத்தொடர் உள்ள மானசரோவர், குஜராத்தில் உள்ள பிந்து சரோவர் மற்றும் நாராயண சரோவர், ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் சரோவர் ஆகிய ஐந்து ஏரிகளையும் சேர்த்து தான்.

​ஹனுமன் பிறந்த மலை

சுக்ரீவன் சில வானரங்களுடன் சேர்ந்து, ரிஷ்யமுக பருவதத்தில் வசித்து வந்தனர். அதுதான் தற்போது ஆஞ்சநேய மலை என்று அழைக்கப்படுகிறது. ஆம். இதுதான் ஹனுமன் பிறந்த மலை என்று நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் ஹனுமன் பிறந்தது அஞ்சனத்ரி மலை.

​ஒட்டக வாகனம்

ஒருமுறை ஹனுமன் தன்னுடைய கூட்டத்தோடு ஜாலியாக காலார நடந்து போய்க கொண்டிருந்தாராம். அப்போது அங்குள்ள காந்தமதனப் பள்ளி என்னும் இடத்தில் அழகான, நல்ல ஆரோக்கியத்துடன் பட்டுத் துணிகள் மட்டும் நவ மணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அது அங்கிருக்கும் கற்றாழைகளை முட்களுடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒட்டகத்திற்கு கிட்டதட்ட 12 வயது இருக்கும். அதைப் பார்த்ததும் ஆசையாக அதில் ஏறி அமர்ந்து கொண்டார் ஹனுமன்.

சுசேனா குடை பிடித்துக் கொண்டும், நீலா சாமரங்கள் வீசிக் கொண்டும் மாஹதா ஹனுமனைப் புகழ்ந்து பாடிக் கொண்டும் அந்த காந்தமதனப் பள்ளியை ஜாலியாக ஊர் சுற்றி வந்தார்கள். ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் போது, ஹனுமன் செருப்பு அணியாமல் தான் உட்காருவார். அவருடைய காலணிகளை பாவனா தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டே வருவார். இப்படித்தான் ஒட்டகம் அனுமனின் வாகனமாக மாறியது.

 இப்படித்தான் ஒட்டகம் அனுமனின் வாகனமாக மாறியது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
UpanishadsWhere stories live. Discover now