பகுதி -1
சங்கம் வளர்த்த மாநகரம்...
தமிழ் பெருமை உயர்த்தி
சொல்லும் மாநகரம்....
மல்லிகை மணம் நிறைந்த
மாநகரம் - மதுரை மாநகரம்...மதுரை என்றால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு மட்டுமல்ல தமிழ்நாடு டாஸ்மாக்கிலும் முதல் இடம் என்பதும் பலருக்கு ஞாபகத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை . மதுரை எல்லீஸ் நகரில் இருக்கும் டாஸ்மாக் பார் ஒன்றில் ,
" ஸார்... பார் க்ளோஸிங் டைம் ஸார்.." , என்று உள்ளடங்கிய குரலில் அங்கு பணிபுரியும் பணியாள் வெளியிட ,
" அப்படியா.." என்று எந்த கவலையும் இல்லாமல் முழு போதையில் தன் க்ளாஸை நிரப்பிக் கொண்டிருந்தவனை வெளியே அனுப்பும் வழி தெரியாமல் தடுமாறி நின்றிருந்தான் , அந்தக்கடை ஊழியன். அதையே மீண்டும் அவன் உறைக்க ,
" டேய்... இப்ப எதுக்கு டா.. திரும்ப திரும்ப சொல்லீட்டு இருக்க.. க்ளோஸிங் டைம்னா.. மூடிட்டுப் போடா... என்னை ஏன்டா தொந்தரவு பண்ற... " என்று அவனை அடிக்க எழுந்தவனால் முடியாமல் தடுமாறி மேஜை மீதே விழுந்தவன் , முழு போதையில் இருந்தான்.
அள்ளி அள்ளிக் கொடுத்தவன் என்பதாலோ என்னவோ ? மணிக்கணக்காக நேரம் காலம் பாராமல் குடிக்கும் இவனிடம் சற்று கரிசனம் நிறைந்திருந்தது அவனுக்கு..
தன் உள்ளங்கையால் வியர்த்து வழியும் முகத்தை துடைத்தவனுக்கு குடிக்கும் சோமபானம் போதவில்லை போல... தன் சட்டையின் கழுத்துக் காலரை பிடித்திழுத்து மீண்டும் தன் முகத்தை துடைத்து ,
" டேய் அந்த கருமத்த எடுடா... சும்மா நொய்.. நொய்..ன்..னு... நிம்மதியா குடிக்க விடாமப்படுத்துது " , என்று விடாமல் அலறிய அலைபேசியை காண்பித்து எரிச்சலாக கூற இல்லை குழற ,
" ஸா..ர்... அது உங்க போன் ஸார்... " என்று மென்று முழுங்கியவனாக கூறினான் அந்த வாலிபன்.
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...