பகுதி - 54
அவன் வழங்கிக் கொண்டிருக்கும் நீரை பருகியவளாய் இருந்தாலும் , நா வறட்சி அதிகரித்ததாய் இருந்ததே தவிர , குறைவில்லாமல் இருக்க.. மூச்சுக்கு ஏங்கித் தவிக்கத் தொடங்கியவளை கவனிக்கும் நிலையில் எல்லாம் அவனில்லை .
விழிகளை மூடி ஆழ்ந்து அனுபவித்தவனாய்.. பரவசாமாக இருந்தவனின் முகத்தை அவ்வளவு நெருக்கமாக , பார்த்ததில்.. அவளும் கண்டுண்டு கிடந்தவளாய் . விட வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவனாக , சரண் செயல்பட்டுக் கொண்டிருக்க.. தாமரையோ , அவன் வெளிப்படுத்து.. காதலில் கரைய முயன்றுக் கொண்டிருந்தவளாய் இருந்தாள் .
'இது என்ன..', என்று நினைத்தவளாய்.. இப்படியான எண்ணமே அவளுள் எழுந்து ஆட்டிப்படைக்க.. அவனோ , மலரை மொய்க்கும் வண்டாய் மாறி.. பருகிக் கொண்டிருக்கும் தேனின் சுவையை இழக்க மனமில்லாமல், இதழ்களுக்குள் நடக்கும் ஆராய்ச்சியில் இருந்தும் வெளி வந்திருக்கவில்லை .
தாமரையும் , அவன் அளிக்கும் பிரம்மிப்பில் இருந்தும் வெளி வந்திருக்கவில்லை . ஒரு காலத்தில்.. அவன் கையெழுத்தை பெறுவதற்காகவும்.. நெருங்க முடியாமல் தவித்த நாட்கள் எத்தனையோ.. கூட்டத்திற்கு நடுவிலும்.. அவளால் நெருங்க முடிந்தது இல்லை . மான்சியின் இல்லத்திற்கு அவன் தனிப்பட்ட சந்திப்பிற்காக வந்திருக்கும் பொழுதுகளிலும்.. அணுக முடிந்ததும் இல்லை.
ஆனால் , இன்று.. என்று எண்ணம் எழுந்த நொடி.. அவ்வளவு தான் , வெகுநேரமாக , தனக்குள்ளாக போராடிக் கொண்டிருந்தவளுக்கு.. மேலும் , கடின யுகங்களாக மாறியிருக்க.. இதயமோ தாறுமாறாய் எகுறிக் குதித்து.. இதற்கு மேல் முடியாது என்பதை உணர்த்தியது போல் , மூச்சு முட்டும் நிலையில் இருந்து விடுபட நினைப்பவளுக்கு.. சுவாசக்காற்று அதிக தேவையாகிப் போனது .
அந்த நிலையிலும் , அவளால் அவனை விலக்க முடியாமல் இருக்க.. அவளின் தேவையை நடுங்கும் உடலால் புரிந்துக் கொண்டவன்.. சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவனாய்.. தானாக , அவள் இதழ்களுக்கு விடுதலை அளித்திட்டு.. கூர்மையாக ஆராய.. நம்ப முடியாத திகைப்பை அப்பட்டமாக , அவளது முகம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...