வா.. வா.. என் அன்பே - 54

1.4K 43 23
                                    

பகுதி - 54

அவன் வழங்கிக் கொண்டிருக்கும் நீரை பருகியவளாய் இருந்தாலும் , நா வறட்சி அதிகரித்ததாய் இருந்ததே தவிர , குறைவில்லாமல் இருக்க.. மூச்சுக்கு ஏங்கித் தவிக்கத் தொடங்கியவளை கவனிக்கும் நிலையில் எல்லாம் அவனில்லை .

விழிகளை மூடி ஆழ்ந்து அனுபவித்தவனாய்.. பரவசாமாக இருந்தவனின் முகத்தை அவ்வளவு நெருக்கமாக , பார்த்ததில்.. அவளும் கண்டுண்டு கிடந்தவளாய் . விட வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவனாக , சரண் செயல்பட்டுக் கொண்டிருக்க.. தாமரையோ , அவன் வெளிப்படுத்து.. காதலில் கரைய முயன்றுக் கொண்டிருந்தவளாய் இருந்தாள் .

'இது என்ன..', என்று நினைத்தவளாய்.. இப்படியான எண்ணமே அவளுள் எழுந்து ஆட்டிப்படைக்க.‌. அவனோ , மலரை மொய்க்கும் வண்டாய் மாறி.. பருகிக் கொண்டிருக்கும் தேனின் சுவையை இழக்க மனமில்லாமல், இதழ்களுக்குள் நடக்கும் ஆராய்ச்சியில் இருந்தும் வெளி வந்திருக்கவில்லை .

தாமரையும் , அவன் அளிக்கும் பிரம்மிப்பில் இருந்தும் வெளி வந்திருக்கவில்லை . ஒரு காலத்தில்.. அவன் கையெழுத்தை பெறுவதற்காகவும்.. நெருங்க முடியாமல் தவித்த நாட்கள் எத்தனையோ.. கூட்டத்திற்கு நடுவிலும்.. அவளால் நெருங்க முடிந்தது இல்லை ‌ . மான்சியின் இல்லத்திற்கு அவன் தனிப்பட்ட சந்திப்பிற்காக வந்திருக்கும் பொழுதுகளிலும்.. அணுக முடிந்ததும் இல்லை.

ஆனால் , இன்று.. என்று எண்ணம் எழுந்த நொடி.. அவ்வளவு தான் , வெகுநேரமாக , தனக்குள்ளாக போராடிக் கொண்டிருந்தவளுக்கு.. மேலும் , கடின யுகங்களாக மாறியிருக்க.. இதயமோ தாறுமாறாய் எகுறிக் குதித்து.. இதற்கு மேல் முடியாது என்பதை உணர்த்தியது போல் , மூச்சு முட்டும் நிலையில் இருந்து விடுபட நினைப்பவளுக்கு.. சுவாசக்காற்று அதிக தேவையாகிப் போனது .

அந்த நிலையிலும் , அவளால் அவனை விலக்க முடியாமல் இருக்க.. அவளின் தேவையை நடுங்கும் உடலால் புரிந்துக் கொண்டவன்.. சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவனாய்.. தானாக , அவள் இதழ்களுக்கு விடுதலை அளித்திட்டு.. கூர்மையாக ஆராய‌‌.. நம்ப முடியாத திகைப்பை அப்பட்டமாக , அவளது முகம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now