வா.. வா.. என் அன்பே - 88

1.3K 44 18
                                    


பகுதி - 88

சரண் வீசிய சொற்கள், கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றியது போல், துடிதுடித்து போனாள் .

கணவனின் அருகாமையில் மெழுகாய் உருகவே நேற்றிரவு முதல் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது . ஆனால் , அறியாமல் செய்த செயலால் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு.. அதன் கணம் தாளாமலேயே , உண்மையை வெளிப்படுத்தி இருந்தாள் . ஆனால் , அதன் தாக்கம் எரிமலையின் குழம்பாய் , அவளை தாக்கும் என்று நினைத்திருக்கவே இல்லை .

வெளிறிய அவளது முகத்தை காண முடியாதவனாய் , இறுக்கமாக விழிமூடிக் கொண்டவனுக்கோ , ஆத்திரம் மட்டுமே உடல் முழுவதும் உஷ்ணத்தை அதிகரிக்க செய்திருந்ததில் , எப்பொழுதும் போலவே.. நிதானத்தை இழந்தவன்.. எப்பொழுதோ , அவளது ஒற்றை ஆடையை நீக்கி.. அவன் மட்டும் ஆடையாகி போயிருந்தில் , வலப்பக்கமாய் சரிந்தவன்.. அணுவணுவாய் , அவளது வெற்று உடலில் பாய்ந்த பார்வையில்.. அணு அளவிலும் காதல் கலக்காமல் , காமத்தை நிறைத்து மொய்த்தவனாக , சங்கு கழுத்தில் துவங்கிய.. அவனது விரல்களின் ஊர்வலம்.. ஆங்காங்கே , மிகுந்த அழுத்தத்துடன் பயணித்து.. வயிற்றுப் பகுதிக்கு வந்து இருக்க.. அதில் , மேலும் அழுத்தமாக கோலமிட்டவன்..

" பரவால்லை.. கொஞ்சம் தொப்பை போட்டு இருக்க.. ஆனா ..", என்று விரல்களும் இதழ்களும் மேலும் முன்னேறத் தொடங்கவும்..

" நிசமாலுமே.. நான் உங்களை.. உங்களை.. தூண்டினேன்னு சொல்றீகளா..", என்று இருவரின் உறவு நிலைக்கான தேடலை கேள்வியால் , துடிக்கும் இதழ்களை அடக்கியவளாக கேட்க..

முதலில் , அதீத வருத்தத்தால் மட்டுமே , வார்த்தைகளை சிதறடித்திருந்தான் . ஆனால் , நொடிக்குள் ஆதீக்கமாக ஆர்.பீ.எஸ்ஸின் குணம் மேலோங்கி இருந்ததில்.. ஆணவமாகவே , அவனது விரல்கள் பதிய.. புத்தியில் , தாமரையின் ஏக்கம் ஏற மறுத்திருக்க..

" இல்லையா..", என்றவன்.. அவளது கன்னத்தில் கட்டை விரலால் அழுத்தமாக தடவிட.. அவன் தீண்டலில் தன்மையை உணர முடியாதவள் இல்லையே.. அவ்வளவு எளிதாக , தன்னவனால் விலகி சென்றிட முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாலும்.. காதலால் அது நடைப் பெறவில்லை என்பதையும் புரிந்தவளுக்கோ‌.. இதயத்தின் அடி ஆழம் வரை அவதிக்கு உள்ளாக்கியது..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now