வா.. வா.. என் அன்பே - 53

1.2K 41 18
                                    

பகுதி - 53

தாமரையுடன் , பேசிய பிறகு தீவிர சிந்தனை வயப்பட்டவனாக ஆரவ் அசையாமல் நின்றிருக்க.. மான்சியின் வருகையும் அவனை கலைக்கவே இல்லை . அவளது அலைபேசி , அவன் கரத்தில் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் வருந்தாதவள்.. முகம் இறுக, நின்றிருந்தவனின் கலவையான வெளிப்பாட்டிற்கான காரணம் அறிய வேண்டியிருந்ததால் , மென்மையாக.. அவன் கரத்தில் இருந்து கைப்பற்றியவளாய்.. யாரென பார்க்க அது தாமரையுடையதாக இருக்கவும் , மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்து..

" மார்னிங்கே.. உன்னை உண்டு இல்லைன்னு பண்ணீட்டாளா.. என்ன சொன்னா.. ஏன் என்கிட்ட சொல்லாம மேரேஜ் பண்ணீங்கன்னு சண்டை போட்டாளா.. இல்லை.. ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டனு சண்டை போட்டாளா..",  என்று கேட்டுக் கொண்டிருக்க.. ஆரவ்விற்கு , மான்சியின் வருகையே உணராத போது , அவள் எழுப்பும் கேள்விகளுக்கு எங்கிருந்து பதில் கிடைக்கும் .

ஆரவ்வின் கவனம்.. அவளிடத்தில் இல்லாததை கவனித்தவள்.. "ஆரவ் , என்னாச்சு..", என்று சந்தேகமாய் கேட்க..

" ம்.. நத்திங்..  வா..", என்று நகர்ந்திருக்கவும்.. மான்சியோ , அழுத்தமாக நின்றிருந்தாள் . அவள் வராததை கவனித்தவன்..

" ஏன் அங்கேயே நின்னுட்ட வா..", என்று அழைக்க..

" தாமரை பேசினாளான்னு கேட்டேன்..", என்று அழுத்தம் கூடியவளாய்..

" ம்.. ", என்று உள்ளடங்கிய பதிலையே கொடுக்க..

" ரொம்பவே திட்டினாளோ.. ", என்று மெல்லிய கோபம்.. அது எப்படி அவள் திட்டாலாம்.. என்ற மெல்லிய உரிமையும் வெளிப்படுத்திருந்தால் போலும்..

ஆனால் , அவனுக்கு.. அதை கவனிக்கும் அளவிற்கு மனம் தெளிவில்லாமல் இருந்ததில் , "ம்ஹும்..", என்றான் .

" அப்புறம்..",

" அதிகமா வருத்தப்பட்டா.. அவளை பற்றி நினைக்கவே இல்லைன்னு சண்டை போட்டா..", என்று முகம் கசங்க.. கூற..

எதிர்ப்பார்க்காத பதிலாக இருக்கவும்.. விரைந்து நெருங்கியவளாய்.. " என்ன.. என்ன சொன்னா..", என்று பதற்றத்தை வெளியிட..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now