பகுதி - 74
காலத்தின் வேகத்திற்கு முன் நாம் அனைவரும் பார்வையாளர்களே.. ஏன்.. அதனுடைய பொம்மைகள் என்றும் சொல்லலாம் . நமக்கான விருப்பத்திற்கு இடமே கிடையாது.. இருந்தபோதும் , அதன் சுழற்சிக்குள் நாமும் சுழன்றுக் கொண்டே இருப்போம்.. அதுவும் , சுழற்ற வைத்துவிடும் .
நேற்று போல் இருந்தது.. ஆனால் , மூன்று மாதங்கள் , சொடுக்கிடும் மணித்துளிகளுக்குள்ளாக.. கடந்து இருக்க.. அவன் கைச்சிறைக்குள் பகல் என்று பாராமல் கட்டுண்டு கிடந்ததே தாமரையின் நினைவில் எழுந்து ஆட்டுவித்ததாய் .
இரவு பகலும் போல் இன்பமும்.. துன்பமும்.. சூரியன் சந்திரன் போல் கோபமும் தாபமும்.. இந்த உவமை எவ்வளவு உண்மை என்றே நினைத்தவளாக இருண்ட வானில் ஒற்றை நிலவை தேடியவளாய்.. தன் மார்பில் கரங்களை கட்டிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள் தாமரை .
வெளிர் நிற இரவுடையில்.. நின்றிருந்தவளின் தோற்றமோ.. எண்ணில் அடங்கா சோகத்தை தனக்குள் பொதித்தது போல் இருக்க . மூன்றே மாதத்தில்.. மூவாயிரம் மாற்றங்கள் தன் வாழ்க்கையில் அரங்கேறி இருப்பதை நினைத்து மகிழவும் முடியாமல்.. தன்னவனில் நினைவால் மனம் வெதும்பியவளாக தன்னித்து நின்றுக் கொண்டிருகிறாள் அவள்..
உறங்குவதற்கும் நேரம் கிடைத்திருக்கவில்லை . மூச்சு முட்டும் அளவிற்கு வேலைகளும் பொறுப்புக்களும் அவளை இழுத்துக் கொண்டதில்.. திண்டாடியே இருந்தாலும் சரணின் மௌனத்தை நினைத்து கலங்குவதற்கு இடம் இல்லாமல் இருப்பதும் மனதிற்கு இதமாகவே இருந்தாலும் கூட.. அலைபேசியின் , அழைப்பையும் ஏற்க மறுத்துக் கொண்டிருக்கும் தன்னவனின் செயலால் அதிகம் துவண்டவளாய் , உரிமேறியிருக்கும் அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்துக் கதறவே தவியாய் தவித்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளி வர முடியவில்லை ..
மகிழ்ச்சியை கொட்டிக் கொடுத்த அந்நாளிலேயே மீண்டும் நரகத்தின் வலியையும் காட்டிவிட்டான் . எவிரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியவில்லை . 'நான் தவறு செய்துவிட்டேனோ..' என்று கோடி முறை நினைத்து நினைத்து மறுகியாகிவிட்டது . ஆனால் , பலன் பற்றி மட்டும் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை .
أنت تقرأ
வா.. வா... என் அன்பே...
العاطفيةகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...