வா.. வா.. என் அன்பே - 95

1.5K 47 14
                                    

பகுதி - 95

எதை எதிர்ப்பார்த்தாலும் சரணின் இத்தகைய செயலை நினைத்தே பார்க்காத தாமரை.. வெகுவாய் சிலை என சமைந்துவிட்டாள் .

வெளியே போ.. என்று தள்ளாத குறையாக சரணின் நடத்தை அப்பூவையாளை பெரிதும் சுழற்றி அடித்திருந்தது . அரைவிநாடியில் மூச்சே நின்றது போல் சுவாசத்தை சுவாசிக்க மறந்தவளாய்.. சுற்றத்தை அவசரமாக ஏறிட.. வைஷ்ணவ்வின் இருக்கை காலியாக இருந்ததுமே , தடைப்பட்டிருந்த காற்று அவளது நெஞ்சுக் கூட்டில் இருந்து வெளி வந்தது .

வழிந்த கண்ணீர் துளிகளையும் அவசரமாக துடைத்தவள்.. வேகமாக , அக்கட்டிடத்தில் இருந்து வெளியேற.. நடந்த நிகழ்வில் இருந்து மீள முடியாதவளாய் தடுமாறி போயிருந்தாள் ‌.

" என்னைய வெளிய தள்ளாத குறையா தள்ளீட்டாகளா.. அப்போ இதுக்கு என்ன அர்த்தம்.. நான்.. அவுக பாப்பா இல்லை.. மான்சி க்கா சொன்ன மாதிரி வேலைகாரி தான.. இவ்வளவு நாள் என்னைய வேலைக்காரின்னா நினைச்சிருக்காக.. ஆமா.‌. நான் வேலைக்காரிதேன்.. ஏன் வேலைக்காரியா இருக்குறவுகளுக்கு மனசு இருக்காதா.. இல்லை.. அதுல ஆசாபாசம் இருக்க கூடாதா‌.. இவிய.. நான் உங்க பாப்பா தானேன்னு வெட்கத்த விட்டு கெஞ்சி கேட்டும்‌.‌.. பதில் சொல்லையே.. அப்படினா..', என்று அவனிடம் நேரடியாக காண்பிக்க முடியாத தன் உள்ளக் குமுறல்களை அனைத்தையும் தனக்குள்ளாக கேட்டுக் கொண்டவளாய் நடையை எட்டிப் போட்டு நடந்துக் கொண்டு இருந்தவளுக்கோ.. அவனை தேடி வருகையில் , ஏறி வந்த மகிழூந்தின் நினைவும் வர மறுத்திருக்க..

பலவற்றை யோசித்து குமுறியவளாக நடந்தவளுக்கும் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல்.. வேகமாக , சாலை ஓரமாய் தன் போல் நடந்துக் கொண்டே இருக்க..  எதிரில் வந்த வாகனங்களையோ.. அல்ல பின்னால் அவள் பெயரை கத்தி அழைத்தவனாக ஓடி வந்த சரணின் குரலோ.. அவளை சென்று அடையவே இல்லை .

அடங்க மறுத்த இயலாமை.. விஷ அம்புகளாய் தொய்த்த அவன் வார்த்தைகள் எல்லாம் அச்சிறுபெண்ணை ஆட்டுவித்திருந்ததில்.. நிலையில்லாமல்.. இலக்கு இல்லாதவளாய் நடந்துக் கொண்டிருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now