வா.. வா.. என் அன்பே - 57

1.1K 45 18
                                    

பகுதி - 57

ஆரவ்வின் வருகையை.. பிரச்சினை செய்ய வந்ததாக தவறாக நினைத்து.. தந்தையிடம் பேசினால் பதில் வராது என்பதால் மனைவியின் பேயைக் கண்டவள் போல் அரண்டு வெளிறியவளாக நின்றிருந்த தோற்றதில்.. ' அப்படி என்ன அவனால நம்ம வீட்டுக்குள்ள வந்து பண்ணீட முடியும்னு.. இப்படி பயந்து நிக்கிறா..', என்று சளிப்பாக நினைத்தாலும்.. அப்பா இருக்கும் பொழுது இவளுக்கு இங்கே என்ன வேலை.. இவள் ஏன் அவன் முன்னால் வர வேண்டும் என்று.. எரிச்சலே.. அவளிடத்தில் கடுமையை காட்டிவிட.. ஆரவ் வந்து சென்றதை விடவும் , அவள் முகத்தில் அதிகமாக கலவரத்தை தேக்கியவளாக  நிற்கவும்.. பெரிதும் குழம்பியவனாய் நினைத்தவனாக இருந்தான் சரண்..

சரணின் கேள்விக்கு ராம்
துணைக்கு வந்தவராய்..

" நான் தான் வர சொன்னேன்..", என்றார்.‌. திடனான குரலில் சொல்ல..

" அவனையா.. நீங்களா‌..", என்று கேட்டதிலேயே நான் உங்களை நம்பவில்லை என்பது போல் இருந்தது..

" ஆமா.. ", என்று அழுத்தம் திருத்தமாக கூற..

" ஏன்‌..", என்று கூர்மையாக வினவ...

" நீ எப்போது இருந்து என்னையே கேள்வி கேட்க பழகின சரண்..", என்று தனக்குள் இருக்கும் படபடப்பையும் வெளிப்படுத்தாமல் , மிக கவனமாகவே வார்த்தைகளை கோர்த்து மகனை அழுத்தமாக ஏறிட.. சரணின் திகைப்பும்.. கூர்மையும்.. கூடியதாகவே இருந்தது .

ஆனால் , எதையும் கண்டுக் கொள்ளாதவர் போன்று.. "தாமரை.. ஜூஸ் எடுத்திட்டு வாம்மா..", என்று கூறவும்.. தலையசைத்து.. அவனின் முகம் காணவும் மறுத்தவளாய் , நொடிக்குள் சென்று மறைய..

அவன் இரும்புத் தேகம்.. மேலும் , முறுகேறி.. விடைப்பாய் மாறி இருக்க.. சரணின் சிந்தனைக்களுக்கும் சினத்திற்கும் தடைவிதித்திவராய்.. ராம் கேள்வி எழுப்பியிருந்தார்...

" ஜே.ஜேவை என்ன பண்ணின..", என்றவுடன்.. அதுவரை முதுகைக்காட்டிக் கொண்டு நின்றிருந்தவன் பட்டென்று அவரை பார்க்க.. இரு கண்களையும் சுருக்கி.. தன் வலக் கன்னத் தாடையை தடவியவனாய்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now