பகுதி - 62
சரணின் செயலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத தாமரையோ.. சமைந்து அதே இடத்தில் நின்றுவிட்டாள் . வேலை ஆட்களிடத்தில் , சினம் துளிர்க்கவில்லை.. இப்படி செய்.. அப்படி செய்.. என்ற கட்டளைக்களுக்கு இடம் இருந்திருக்கவில்லை . மாறாக , அவன்.. எடுத்து சென்று வைத்தவனின் முகத்திலோ , துளியளவு முகச்சுழிப்பு இல்லை. அவர்களது கடையாக இருந்தாலும் , சொடுக்குப் போட்டாலே பத்து நபர்களுக்கு மேல் வருக் கூடிய அளவிற்கு ஆட்கள் நிறைந்திருக்கும் இடத்தில்.. அவளுக்காக, அவனே செய்த செயல் மொத்தாமாய் புரட்டிப் போட்டிருந்தது .
' எனக்காக.. எனக்காகவா.. இவிய செஞ்சது எனக்கானதா.. ' என்று அவளது மூளையோ , ஆர்ப்பரித்துக் கொந்தளித்து சிக்கிக் கொண்டிருந்ததில் இமைகளோ.. இமைக்கவும் மறந்து தன்னவனையே பார்த்துக் கொண்டு இருக்க.. அப்படியே, நின்றுவிட்டாள் .
சரணின் காலடிகள், அவளை நெருங்கிக் கொண்டிருப்பது... புரிந்தே இருந்தாலும்.. அவனை , அவனது நேசத்தை கண்களாலேயே பறுகிக் கொண்டிருந்தவளுக்கு.. அசைய வேண்டும் என்றோ , மற்றவர்களின் பார்வைக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதோ புரிந்திருக்கவில்லை .
அகல விரிந்த கண்களில் தெரிந்த காதலும்.. வியப்பும்.. அவனுள் ஊற்றெடுத்த உற்சாகம் கரையை கடக்கவே துணிந்த செயலாய்.. இதழ்களோடு இதழ்களை பதித்து.. பூவின் தேனை உறிஞ்சி எடுத்தவனுக்கோ.. ' ஆமா.. எல்லாமே உனக்காக.. உனக்காக மட்டுமே.. நானே உனக்காக மட்டுந்தான்..', என்று பதில் அளிப்பவன் போல்.. இதழ்களின் வழியே.. விடையளித்துக் கொண்டிருந்தான் .
' இது உன்னால ஒத்துக்க முடியலையா..', என்று கேள்வியும் அவனுள் உதித்து.. பருகிக் கொண்டிருந்த இதழின் வாயிலாகவே , தன் இதழ்களால் அழுத்தம் கூடி.. பற்களால் கடித்து சுவைத்து கேள்வி எழுப்பவும் தவறவில்லை.. பூம்பாவையோ , வாகாய் தலைசாய்ந்து சுகமாய் அனுமதித்திருந்தாள்.. ம்ஹும்.. அவன் வினவிய வினா விடைகளை நன்கு புரிந்தவளாக பதில் அளித்துக் கொண்டிருந்தாள் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...