வா வா என் அன்பே - 62

1.3K 52 22
                                    

பகுதி - 62

சரணின் செயலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத தாமரையோ.. சமைந்து அதே இடத்தில் நின்றுவிட்டாள் . வேலை ஆட்களிடத்தில் , சினம் துளிர்க்கவில்லை.. இப்படி செய்.. அப்படி செய்.. என்ற கட்டளைக்களுக்கு இடம் இருந்திருக்கவில்லை . மாறாக , அவன்.. எடுத்து சென்று வைத்தவனின் முகத்திலோ , துளியளவு முகச்சுழிப்பு இல்லை. அவர்களது கடையாக இருந்தாலும் , சொடுக்குப் போட்டாலே பத்து நபர்களுக்கு மேல் வருக் கூடிய அளவிற்கு ஆட்கள் நிறைந்திருக்கும் இடத்தில்.. அவளுக்காக, அவனே செய்த செயல் மொத்தாமாய் புரட்டிப் போட்டிருந்தது .

' எனக்காக.. எனக்காகவா.. இவிய செஞ்சது எனக்கானதா.. ' என்று அவளது மூளையோ , ஆர்ப்பரித்துக் கொந்தளித்து சிக்கிக் கொண்டிருந்ததில் இமைகளோ.. இமைக்கவும் மறந்து தன்னவனையே பார்த்துக் கொண்டு இருக்க.. அப்படியே, நின்றுவிட்டாள் .

சரணின் காலடிகள், அவளை நெருங்கிக் கொண்டிருப்பது‌.‌.. புரிந்தே இருந்தாலும்.. அவனை , அவனது நேசத்தை கண்களாலேயே பறுகிக் கொண்டிருந்தவளுக்கு.. அசைய வேண்டும் என்றோ , மற்றவர்களின் பார்வைக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதோ புரிந்திருக்கவில்லை .

அகல விரிந்த கண்களில் தெரிந்த காதலும்.. வியப்பும்.. அவனுள் ஊற்றெடுத்த உற்சாகம் கரையை கடக்கவே துணிந்த செயலாய்.. இதழ்களோடு இதழ்களை பதித்து.. பூவின் தேனை உறிஞ்சி எடுத்தவனுக்கோ.. ' ஆமா.. எல்லாமே உனக்காக.. உனக்காக மட்டுமே.. நானே உனக்காக மட்டுந்தான்..', என்று பதில் அளிப்பவன் போல்.. இதழ்களின் வழியே.. விடையளித்துக் கொண்டிருந்தான் .

' இது உன்னால ஒத்துக்க முடியலையா..', என்று கேள்வியும் அவனுள் உதித்து.. பருகிக் கொண்டிருந்த இதழின் வாயிலாகவே , தன் இதழ்களால் அழுத்தம் கூடி.. பற்களால் கடித்து சுவைத்து கேள்வி எழுப்பவும் தவறவில்லை.. பூம்பாவையோ , வாகாய் தலைசாய்ந்து சுகமாய் அனுமதித்திருந்தாள்.. ம்ஹும்.. அவன் வினவிய வினா விடைகளை நன்கு புரிந்தவளாக பதில் அளித்துக் கொண்டிருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now