வா.. வா.. என் அன்பே - 87

1.5K 52 11
                                    

பகுதி - 87

தன் நினைவுகளிலேயே மூழ்கி படுத்து இருந்தவளுக்கு , படார் என்று சத்தம் கேட்டதில் அடித்துப்பிடித்து எழ.. கீழே விழுந்த பேனா ஸ்டேன்ட் மற்றும்  தரையில் சிதறிக் கிடந்த பொருட்களை சேகரித்தவனாய் சரண் இருந்தான் .

" தூங்கலையா..", என்று மென்குரலில் தாமரை வினவியவளாக.. அவளும் , வேகமாக படுக்கையில் இருந்து இறங்கி பொருட்களை எடுக்க.. அவனோ , காதில் விழாதவன் போலவே செயல்பட்டு.. மேஜையின் மீது அதன் இடத்தில்  வைத்தவன்..  அவனுடைய லேப்டாப் பேக்கை கரத்தில் எடுத்துக் கொண்டு வெளியேற செல்கையில்..

" பேசவே மாட்டீயளா..", என்று பரிதவிப்பை மட்டுமே தாங்கியவளாய்.. எவ்வளவு முயன்றும் தோற்று.. கண்ணீருடன் அவன் முன் நின்று கெஞ்ச..

" அதான் எனக்கும் சேர்த்தே நிறைய நீயே பேசீட்டியே.. ", என்று முகத்தில் உணர்ச்சிகள் துடைத்தவனாய் ,  மீண்டும் நகர முற்பட..

" ஒரு.. ஒரு நிமிஷம்.. நான் சொல்ல வரதை கேளுங்களேன்..", என்று அவனை முன்னேற விடாமல்  தடுத்தவளாக மன்றாட..

" சொல்றதுக்கு பாக்கி இருக்குன்னு நினைக்கிறியா.. ", என்று சீறியவனின் விழிகளில் எப்பொழுதும் தென்படும் மென்மையும் மயக்கமும் அழியப்பட்டு.. ரௌத்தரமாய்  ,
" நான் ஒரு முட்டாள்ன்னு சொல்லாம சொல்லீட்ட.. ", என்று உறுமலை வெளியிட்டவனாக நகர முற்பட..

" இந்த நேரத்தில எங்குட்டு போறீய..  அக்கா வருந்துவாக..", என்று தன் உள்ள உதறலையும் தனக்குள் புதைத்தவளாக நடுங்கிக் கொண்டே , அவசரமாக கூறி தடுத்திருந்தாள்..

இறுக்கமாக விழிகளை மூடித் திறந்தவனுக்கோ.. ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை . உள்ளத்தின் குமுறல் இருக்கும் இடத்தின் நினைவால் வார்த்தைகளை சிதறடிக்கவும் பிடித்தம் இல்லாமல் போகவே.. அவள் இருக்கும் அறையே மூச்சு முட்டும் உணர்வை அதிகரிக்க செய்திருந்ததாய் . மான்சி கொடுத்த அடி , குடி போதையில் அனைத்தையும் மறக்க வைத்திருந்தது என்றால்.. அது தாமரையிடத்தில் பலிக்கவில்லை என்பதே நிஜம்‌..  ஏமாற்றமே மிதமிஞ்சியதாய் . மரண வலியையும் தாண்டியதாய் ‌.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now