பகுதி - 115
ரிச்சர்ட் தாமரையை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதை சரண் தடுத்து நிறுத்துவான் என்று அனைவரும் எதிர்ப்பார்க்க . ஆனால் , நம் தலைவரோ , அதனை பொய்யாக்கி இருந்தார் .
அவள் கால் அடியில் மண்டியிட்டு கதறியவனின் செயலாலேயே , ரிச்சர்ட் அவனுக்கு பரிந்து அவள் இடமே சண்டை போட்டு இருந்தான் . ஆனால் , எப்பொழுது மயூரியின் கோபத்திற்காக தங்கையை நினைக்காமல் மருத்துவமனை விட்டு வெளியேற நகர்ந்து இருந்தானோ , தடுத்து நிறுத்தி இருந்தாலும் , அச்செய்கை ரிச்சர்ட்டின் சினத்திற்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் , அவளை அவர்கள் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று கூறியதற்கும் மறுப்பு தெரிவிக்காததும்.. மருத்துவமனையில் இருந்து அவளுடன் அவர்கள் வீட்டிற்கு உடன் அழைத்தற்கும் வர மறுத்தவனாய் , வேலை விஷயமாக வெளியூர் சென்ற செயலையும் , ஏனோ ரிச்சர்டின் மனம் முழுமையாக ஏற்க மறுத்து , இயல்பாக இருக்கவிடாமல் செய்து இருந்தது .
இரு தினங்கள் , அவனிடம் இருந்து ஒரு அழைப்பும் அவளுக்கு வந்து இருக்கவில்லை . தாமரையின் நலனில் அக்கறை அற்றவனாக நடந்துக் கொண்டது வேறு மேலும் அவன் சினத்தை விசிறிவிடுவதாக இருக்க.. கொந்தளித்துக் கொண்டு இருந்தவனை ,
" ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு நீ ரொம்பவே டென்ஷன் ஆகுற ரிச்சா.. சரண் அவளை விட மாட்டேன்னு சொன்னா .. இது அவ அம்மா வீடுன்னு குதிக்கிற . சரின்னு அலோவ் பண்ணினா.. அவனுக்கு அவ மேல அக்கறையே இல்லேன்னு சண்டைக்கு வர . உனக்கு என்ன தான்டா வேணும் . ", என்று தாரா ஒரு கட்டத்திற்கு மேல் அவனுடைய கத்தல் தாளாமல் பொங்கிய பிறகே , சற்று தணிந்து நிதானத்தை கடைப் பிடிக்க முயன்றான் . ஆனாலும் , அதற்கும் சரண் முழுமையாக வழிவிடவில்லை .
மூன்றாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் வாயில் மணியை அழுத்தி காத்து இருந்தவனின் கண்களோ கொவ்வைப் பழமாக சிவந்து இருக்க.. " சரண்.. நீங்க இங்க .. இந்த நேரத்தில..", என்று வார்த்தைகளில் ஏற்பட்ட தடுமாற்றத்துடன் கேட்டவனிடம் ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...