அன்பே -14

1.2K 28 6
                                    

பகுதி - 14

அன்னையின் இழப்பை எண்ணி மருகுவதற்கும், தாமரைக்கு அவகாசம் இல்லாமல் போகவே.. உடன்பிறப்புகளுக்காக ஓடத் துவங்கிவிட்டாள் . இருக்கும் இடத்திற்காக, உண்ணும் உணவிற்காக, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுப்பட வேண்டுமே.. பணத்தின் தேவை தங்கையின் மருத்துவ செலவிற்கு.. அதிக தேவையாக இருக்கவே, அதற்கும் சேர்த்து பாடுபட வேண்டிய நிலை .

பல மாதங்கள் கடந்துவிட்டது, புகைப்படத்தில் மாலையோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்‌‌.. அந்த வீட்டில் ஒற்றை ஆளாக, தன்னந்தனியாக.. அன்னையின் முகத்தை மட்டுமே.. பார்த்துக் கிடந்தாள் . அவளின் நிலையை பார்க்க.. சுந்தரியக்காவிற்கோ, மனமே தாளவில்லை..‌

தன் தாய் உடன் இருந்தவரை, தம்பி தங்கையரும்.. கூடவே இருந்தார்கள் . ஆனால் இப்பொழுது , இருவரையும் , அந்த காப்பகத்தில் விட்டு வந்திருக்கிறாள்.. வீட்டில் அவர்களை தனித்துவிட பயந்தவளாய்..

சினிமாவில் வேலை பார்க்கும் நேரம் போக.. அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் என்று அழைக்கும் விழாக்களுக்கு அலங்காரத்திற்கு அழைத்தால் சென்று வந்து கொண்டிருக்கிறாள் .

இருக்கும் இடத்திற்கு,உண்ணும் உணவிற்கு, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுபட வேண்டுமே.. ஒரு வாரத்திற்கு பிறகு , இன்று தான் வெளியூரில் இருந்து வீடு திரும்பியிருக்கிறாள் .

படுத்த நிலையிலேயே.. அன்னையின் முகத்தை மட்டுமே, பார்த்தவாறு வெறித்துக் கிடந்ததவளுக்கு.. பூதகரமாய் பயமுறுத்தியவாறு இருந்ததது, தங்கையின் உடல்நிலை. தாயின் இழப்பு அர்த்தமற்றதாகி விடக்கூடாது என்ற பதபதைப்பு..

கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு , அதே போன்ற சுழலுக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டது போல் இருந்தது சரணுக்கு . கையில் சிகரெட்டை பிடித்தவனாக.. தீவிர யோசனைக்கு ஆட்பட்டவனாய் . ஒருபுறம் விக்கியின் விலகல் மற்றொருபுறம் தாராவின் காதல்.. மீண்டும் ஒரு அத்தியாயமா ? என்றே தோன்றியது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now