பகுதி - 14
அன்னையின் இழப்பை எண்ணி மருகுவதற்கும், தாமரைக்கு அவகாசம் இல்லாமல் போகவே.. உடன்பிறப்புகளுக்காக ஓடத் துவங்கிவிட்டாள் . இருக்கும் இடத்திற்காக, உண்ணும் உணவிற்காக, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுப்பட வேண்டுமே.. பணத்தின் தேவை தங்கையின் மருத்துவ செலவிற்கு.. அதிக தேவையாக இருக்கவே, அதற்கும் சேர்த்து பாடுபட வேண்டிய நிலை .
பல மாதங்கள் கடந்துவிட்டது, புகைப்படத்தில் மாலையோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்.. அந்த வீட்டில் ஒற்றை ஆளாக, தன்னந்தனியாக.. அன்னையின் முகத்தை மட்டுமே.. பார்த்துக் கிடந்தாள் . அவளின் நிலையை பார்க்க.. சுந்தரியக்காவிற்கோ, மனமே தாளவில்லை..
தன் தாய் உடன் இருந்தவரை, தம்பி தங்கையரும்.. கூடவே இருந்தார்கள் . ஆனால் இப்பொழுது , இருவரையும் , அந்த காப்பகத்தில் விட்டு வந்திருக்கிறாள்.. வீட்டில் அவர்களை தனித்துவிட பயந்தவளாய்..
சினிமாவில் வேலை பார்க்கும் நேரம் போக.. அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் என்று அழைக்கும் விழாக்களுக்கு அலங்காரத்திற்கு அழைத்தால் சென்று வந்து கொண்டிருக்கிறாள் .
இருக்கும் இடத்திற்கு,உண்ணும் உணவிற்கு, உடுத்தும் உடைக்காக வேணும் மூவருக்கு பாடுபட வேண்டுமே.. ஒரு வாரத்திற்கு பிறகு , இன்று தான் வெளியூரில் இருந்து வீடு திரும்பியிருக்கிறாள் .
படுத்த நிலையிலேயே.. அன்னையின் முகத்தை மட்டுமே, பார்த்தவாறு வெறித்துக் கிடந்ததவளுக்கு.. பூதகரமாய் பயமுறுத்தியவாறு இருந்ததது, தங்கையின் உடல்நிலை. தாயின் இழப்பு அர்த்தமற்றதாகி விடக்கூடாது என்ற பதபதைப்பு..
கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு , அதே போன்ற சுழலுக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டது போல் இருந்தது சரணுக்கு . கையில் சிகரெட்டை பிடித்தவனாக.. தீவிர யோசனைக்கு ஆட்பட்டவனாய் . ஒருபுறம் விக்கியின் விலகல் மற்றொருபுறம் தாராவின் காதல்.. மீண்டும் ஒரு அத்தியாயமா ? என்றே தோன்றியது .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...