ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,
எப்பொழுதும் போல் தாமதமான பதிவு.. 😁😁😁.. ஸ்பெல் செக் செய்யவில்லை.. ஸோ , பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன் .
வாரம் இரண்டு பதிவுகள் கண்டிப்பாக முயற்சிகிறேன்.. தினமும் என்பது.. என்னால் இயலாததாகவே இருக்கிறது 😊😊. அதற்கு , முயற்சி செய்து.. பத்து நாட்கள் ஆனாலும் ஒரு பதிவும் என்னால் பதிவிட முடிவதில்லை . ஸோ , புதன் மற்றும் சனிக்கிழமை போஸ்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன்.. இதையாவது நான் சொதப்பாமல் செய்ய வேண்டும்..🤔🤔..
இப்படிக்கு ,
கனி தேவ் 💕💕💕
❇️❇️❇️❇️❇️❇️
பகுதி - 105
ஆயிரம் கனவுகளுடன் காத்து இருந்த தாமரைக்கு பேரிடியாக சரணின் கரத்தில் இருந்த பத்திரம் இருந்தது என்றாலும் மிகையில்லை .
அவ்வளவு , அதிர்வாக இருந்தது . இதுநாள் வரை , எது அவனுக்கு தெரியவே தெரியக் கூடாது என்று தவியாய் தவித்துக் கொண்டு இருந்தாலோ அதுவே இன்று நடந்து ஏறியாதாய் .
" இது என்னன்னு கேட்டேன்..", என்று ஆக்ரோஷமாக நின்று இருந்தவன் முன்பாக நிற்கவே அவளது கால் தன் போல் தள்ளாட துவங்க , கரத்தில் திணித்து இருந்த பத்திரத்தை காணவும் , தேகம் அஞ்சி.. விரல்களையும் நடுநடுங்க செய்து இருந்தது .
" சரண் எதுக்கு இவ்வளவு கோபம்..", என்று சந்தோஷ் இடைப் புகுந்தவனாய் , அவளது கரத்தில் இருந்த காகிதத்தை பிரித்து படித்தவனுக்கு புருவம் லேசாக மேல் உயர்ந்ததே தவிர ," இது என்ன.. அதனால் , என்பது போலவே.. ", சரணின் மீது பார்வையை வீசியவன் .
" சரண் இது ஏன் உனக்கு இவ்வளவு கோபம்..", என்று அவனுக்கு காரணம் புரிந்தே இருந்தாலும் , அவனுடைய மனதை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கியவனை..
" உள்ள போ..", என்று கனல் கக்கும் பார்வையால் சந்தோஷின் மீது பார்வையை வீசியவாறே உறுமியவனின் தோற்றம் கண்டு ஆண்மகனான அவனுக்கே , கிலி பிறந்தது என்றால் தாமரையின் நிலையை பற்றி கூறவும் வேண்டுமோ.. சந்தோஷின் , அரை நொடி தயக்கமும் சரண் மித்ரனுக்கு சினத்தை அதிகரிக்க செய்து இருக்க..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...