வா.. வா.. என் அன்பே - 105

1.9K 50 24
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

எப்பொழுதும் போல் தாமதமான பதிவு.. 😁😁😁.. ஸ்பெல் செக் செய்யவில்லை.. ஸோ , பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன் .

வாரம் இரண்டு பதிவுகள் கண்டிப்பாக முயற்சிகிறேன்.. தினமும் என்பது.. என்னால் இயலாததாகவே இருக்கிறது 😊😊. அதற்கு , முயற்சி செய்து.. பத்து நாட்கள் ஆனாலும் ஒரு பதிவும் என்னால் பதிவிட முடிவதில்லை ‌. ஸோ , புதன் மற்றும் சனிக்கிழமை போஸ்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன்.. இதையாவது நான் சொதப்பாமல் செய்ய வேண்டும்..🤔🤔..

இப்படிக்கு ,

கனி தேவ் 💕💕💕

❇️❇️❇️❇️❇️❇️

பகுதி - 105

ஆயிரம் கனவுகளுடன் காத்து இருந்த தாமரைக்கு பேரிடியாக சரணின் கரத்தில் இருந்த பத்திரம் இருந்தது என்றாலும் மிகையில்லை .

அவ்வளவு , அதிர்வாக இருந்தது . இதுநாள் வரை , எது அவனுக்கு தெரியவே தெரியக் கூடாது என்று தவியாய் தவித்துக் கொண்டு இருந்தாலோ அதுவே இன்று நடந்து ஏறியாதாய் .

" இது என்னன்னு கேட்டேன்..", என்று ஆக்ரோஷமாக நின்று இருந்தவன் முன்பாக நிற்கவே அவளது கால் தன் போல் தள்ளாட துவங்க , கரத்தில் திணித்து இருந்த பத்திரத்தை காணவும் , தேகம் அஞ்சி.. விரல்களையும் நடுநடுங்க செய்து இருந்தது .

" சரண் எதுக்கு இவ்வளவு கோபம்..", என்று சந்தோஷ் இடைப் புகுந்தவனாய் , அவளது கரத்தில் இருந்த காகிதத்தை பிரித்து படித்தவனுக்கு புருவம் லேசாக மேல் உயர்ந்ததே தவிர ," இது என்ன.. அதனால் , என்பது போலவே.. ", சரணின் மீது பார்வையை வீசியவன் .

" சரண் இது ஏன் உனக்கு இவ்வளவு கோபம்..", என்று அவனுக்கு காரணம் புரிந்தே இருந்தாலும் , அவனுடைய மனதை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கியவனை..

" உள்ள போ..", என்று கனல் கக்கும் பார்வையால் சந்தோஷின் மீது பார்வையை வீசியவாறே உறுமியவனின் தோற்றம் கண்டு ஆண்மகனான அவனுக்கே , கிலி பிறந்தது என்றால் தாமரையின் நிலையை பற்றி கூறவும் வேண்டுமோ.. சந்தோஷின் , அரை நொடி தயக்கமும் சரண் மித்ரனுக்கு சினத்தை அதிகரிக்க செய்து இருக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now