ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பச்சரிசி மாக்கோலம் , மாவிலை தோரணம்.. சூரியபகவானின் ஆசீர்வாதத்துடன் விறகு அடுப்பில் சக்கரை பொங்கல்.. மூக்கரும்பின் பந்தல்.. புத்தாடைன்னு கோலாகலமா எங்கள் வீட்டில் கொண்டாடியாச்சு..
இதேபோல் , நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .
பொங்கும் பொங்கல் போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சிகள் பெருக இறைவனிடம் வேண்டுவோம்..
எப்பவும் போல் தாமதமான பதிவிறக்கு மன்னிப்பு வேண்டுகிறேன் . கடந்த பத்து நாட்களாக , அலைபேசியை கையில் எடுக்கவே முடியாத அளவிற்கு வீட்டு வேலைகள் நெட்டி தள்ளிவிட்டது.. கூடவே , வாண்டுகளின் பள்ளி விடுமுறை .. சொல்லவே வேண்டாம்..ஸாரி.. ஸாரி..😔😔🤪🤪
ப்ராப்பரா எடிட் பண்ணல.. ஸோ , மிஸ்டேக்ஸ் இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க.. 🤪🤪
இப்படிக்கு ,
கனிதேவ் 💞💞💞
❇️❇️❇️❇️❇️
பகுதி - 103
சரண் , வேண்டாம் என்றதுடன் ப்ளீஸ் என்று கண்களில் உயிர் வலியை தேக்கியவனாய் ஆறுதல் தேடவும்.. மொத்தமாக துடித்த தாமரையின் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகள் கடைவிழி ஓரம் வழிந்து ஓடினாலும் , தன்னவனை ஆறுதல் செய்வதே முதன்மையாக தோன்றியதில் , அவளது விரல்கள் மிகவும் மென்மையாக தலையை கோத.. அது தந்த இதத்திலும் ஆறுதலிலும் தன்னை நிதானித்தவனாக.. சிறிதளவு தெளிந்தவன்.. அவளில் இருந்து கீழே சரிந்து , தாமரையை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கமாக அணைந்துக் கொள்ள.. நெகிழ்ந்து இருக்கும் மனமோ , அழகான புன்னகை பூக்கச் செய்ய.. காதலின் சோர்வு முழுவதும் பரவி இருந்த போதிலும்.. பனியில் நனைந்த மலராக இருப்பவளை , மேலும் ஆரத் தழுவியவன்..
" பாப்பா.. நாளைக்கு நான் ஜம்மு போறேன்.. ஏர்லியரா கிளம்பனும்.. ம்.. வர பத்து நாள் ஆகும் .. சான்ஸ்கர்ல மொமைல் எடுக்காது.. ஸோ , அங்க இருக்குற வரைக்கும் பேச முடியாது.. ( இல்லேனா மட்டும் அவளோட நீ குழவீட்டா டா இருக்க.. ) என்று மனசாட்சி கடிப்பதையும் கண்டுக் கொள்ளாதவனாக.. மென்மையாக , அவள் கூந்தல் சுருள் முடிகளை காதுமடலுக்குள் நகர்த்தியவனாக , மெதுவாக கூறியவனின் குரலில் வழிந்த ஏக்கம்.. தாமரையை கட்டிப் போட்டு இருந்ததாய் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...